என் கவிதை

என் கவிதை

எனக்கும் கவிதை

எழுதத் தெரியும்

எழுத்து அசை சீர்

அடி தொடை யாப்பு

எதுவுமே

எனக்குத் தெரியாது

ஆனாலும்

எனக்கும் கவிதை

எழுதத் தெரியும்...

கலியொடு வெண்பா

ஆசிரியம் வஞ்சிப்பா

எதுவுமே நானறியேன்

எதுகை மோனை

தூக்கு துள்ளல்

அத்தனையும்

எனக்குத் தெரியாது

ஆனாலும்

எனக்கும் கவிதை

எழுதத் தெரியும்...


மரபுக்கு பிரியாவிடை

கொடுத்து

பாமரன் முதல்

படித்தவன் வரை

விருப்புக் கொண்ட

புதுயுகக் குழந்தை

என்

புதுக்கவிதை


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி