ஆகஸ்ட் 04, 2009

என் கவிதை

என் கவிதை

எனக்கும் கவிதை

எழுதத் தெரியும்

எழுத்து அசை சீர்

அடி தொடை யாப்பு

எதுவுமே

எனக்குத் தெரியாது

ஆனாலும்

எனக்கும் கவிதை

எழுதத் தெரியும்...

கலியொடு வெண்பா

ஆசிரியம் வஞ்சிப்பா

எதுவுமே நானறியேன்

எதுகை மோனை

தூக்கு துள்ளல்

அத்தனையும்

எனக்குத் தெரியாது

ஆனாலும்

எனக்கும் கவிதை

எழுதத் தெரியும்...


மரபுக்கு பிரியாவிடை

கொடுத்து

பாமரன் முதல்

படித்தவன் வரை

விருப்புக் கொண்ட

புதுயுகக் குழந்தை

என்

புதுக்கவிதை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-