காதலின் மறு பக்கம்

பாழடைந்த காவலரணில்

கைவிடப்பட்ட

வெடிகுண்டாக

காத்துக் கிடக்கிறது

உன்னை

குதறிக் கடித்;து

உமிழ்ந்து துப்ப

ஒரு கூட்டம்

மன்மத பாணங்களை

ஏவமுடியாமல்

மனதுக்குள் பூட்டி

மகிழ்ந்தவர்கள்

இன்று

உனக்கு கிடைத்த

மண மாலையும்

மலர்ப் பஞ்சணையும்

கண்டு

புழுங்கித் தவிக்கிறார்கள்

சொல்லம்புகளால்

வேள்வித்தீ செய்தவர்கள்

இருந்தும்

சவமாக உலவுகிறார்

பூமியிலே

பாவம் அவர்கள்

பயித்தியக்காரர்கள்

என்று

அசதியாக

இருந்து விடாதே

கைக்கெட்டாப் பொருள்

என்று

தெரிந்து கொண்டதால்

வெடிகுண்டையும்

ஏவத் தயங்க மாட்டார்கள்

கவனமாயிரு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)