பாழடைந்த காவலரணில்
கைவிடப்பட்ட
வெடிகுண்டாக
காத்துக் கிடக்கிறது
உன்னை
குதறிக் கடித்;து
உமிழ்ந்து துப்ப
ஒரு கூட்டம்
மன்மத பாணங்களை
ஏவமுடியாமல்
மனதுக்குள் பூட்டி
மகிழ்ந்தவர்கள்
இன்று
உனக்கு கிடைத்த
மண மாலையும்
மலர்ப் பஞ்சணையும்
கண்டு
புழுங்கித் தவிக்கிறார்கள்
சொல்லம்புகளால்
வேள்வித்தீ செய்தவர்கள்
இருந்தும்
சவமாக உலவுகிறார்
பூமியிலே
பாவம் அவர்கள்
பயித்தியக்காரர்கள்
என்று
அசதியாக
இருந்து விடாதே
கைக்கெட்டாப் பொருள்
என்று
தெரிந்து கொண்டதால்
வெடிகுண்டையும்
ஏவத் தயங்க மாட்டார்கள்
கவனமாயிரு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-