3.4. இக்காலத் தமிழறிஞர் சிலர் பற்றி…

அ. நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்

காலம்: 1761-1780 வரை
பின்னணி: தொன்பிலிப்பு வில்வராச முதலியாரின் மகன்
அன்னை வழியில் செகராச சேகரன் மரபில் வந்தவர்.
திறமை: சிறு வயதிலேயே கல்வியாற்றல் மிக்கவர்.
‘பொன்பூச் சொரியும்…” என்ற பாடல் மூலம் சிறுவனாகக்
-கவியுலகில் கால் பதித்தவர்.
தந்தையால் எழுத முடியாமல் நிறுத்தப்பட்ட நூலை எழுதி
-முடித்தவர்.
பாராட்டு: பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் இவரை
‘ஈழத்து இலக்கிய வழிக்கு ஊற்று’ எனப் புகழ்ந்துள்ளார்.
நூல்கள்: பறாளை வினாயகர் பள்ளு
கரவை வேலன் கோவை
கல்வளை அந்தாதி
மறைசை அந்தாதி

ஆ. அரசகேசரிப் புலவர்

காலம்: யாழ்ப்பாண மன்னர் கால இறுதி
பின்னணி: 8ஆம் பரராசசேகரனின் சகோதரன்
நாயன்மார்க்கட்டில் வசித்தவர்.
நீர்வேலியை ஆட்சி புரிந்தவர்
திறமை: தமிழ்-வடமொழிப் பண்டித்தியம்
நூல்: இரகுவம்சம்(மொழிபெயர்ப்பு)
தட்சிணகைலாய புராணத்தையும் இவரே எழுதினார் என்பர். எனினும் இது ஆய்வுக்குரியது.


இ. மாதகல் மயில்வாகனப் புலவர்

காலம்: 1779-1816 வரை
பின்னணி: தந்தை-சுப்பிரமணியன்
கூலங்கைத் தம்பிரானிடம் கற்றவர்.
சிறப்பு: காசி, சிதம்பரம் எனத் தலயாத்திரை செய்தவர்.
நூல்கள்: புலியூர் அந்தாதி
காசியாத்திரை விளக்கம்
யாழ்ப்பாண வைபவமாலை
ஞானலங்கார ரூப நாடகம்




அடிக்குறிப்பு

1. சிவத்தம்பி.கா, ஈழத்தில் தமிழ் இலக்கியம், பக்20
2. சிவத்தம்பி.கா, தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும், பக்39
3. நடராசா.எவ்.எக்ஸ்.சி, மட்டக்களப்பு மாண்மீயம், பக்66
4. குணராசா.க, ஈழத்தவர் வரலாறு, பதிப்பு-2, பக்88-89
5. ஜம்புலிங்கம்பிள்ளை.சே.வே, தண்டிகை கனகராயர் பள்ளு-1932
6. நடராசா.எவ்.எக்ஸ்.சி, ஈழத்தமிழ் நூல்வரலாறு, பதிப்பு-2, பக்19
7. சிவலிங்கராசா.எஸ், ஈழத்து இலக்கியச் செல்நெறி, பதிப்பு-2, பக்63

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி