மனிதக் கூடுகளைச் சுமந்தலையும்
உயிர்களுக்கு மத்தியில்
‘மனிதம்’ காட்டி என்னை
மயங்க வைத்த தோழனே !
உன்னைப் பிரிவதற்கு
என் மனம் ஒப்பவில்லை நண்பா.
வார்த்தையில் வர்ணஜாலங்களை
வாரி இறைத்த – என்
கல்லு}ரிக் கலைஞனே
என் உயிரை அழுத்திப்
பெருவலியெடுக்க நான்
துடித்துப் போகிறேன்
உன்னைப் பிரிவதை எண்ணி.
காயமற்ற இடங்களில் கூட
உன் பிரிவு வலியைத் தருகிறது தோழா !
உடைந்த சிலம்பின் கதறலாய்
தனித்து விடப்பட்ட
சிறு தீவின் குமுறலாய்
துயரெடுத்துப் புலம்புகிறது
என் இதயம்.
என் உயிர் நண்பனே !
உன் கைப்பேசியில்
என் எண்ணை அழுத்தி
அடிக்கொரு ஒரு
‘குறுஞ் செய்தி’ அனுப்புவாய்.
இல்லையேல்
நாளொரு பொழுது
‘எப்படிச் சுகம்? ’ என்ற
ஓற்றை வரியிலாவது
நலம் விசாரிப்பாயென்ற
நம்பிக்கையுடன்
பிரிந்து செல்லும்
கல்லு}ரி நண்பி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-