இடுகைகள்

நவம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொற்சிலம்பம் - நான்கு

இலங்கையிலும்தமிழ் நாட்டிலும் தமிழ் பேசபட்டாலும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலானஉச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம் . இலங்கையிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது . அதேபோல் தமிழகத்திலும் உண்டு . ஆனால் , இலங்கைத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம் . அவற்றினை புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன் . '' மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி '' என்ற கொள்கை உடையவன் நான் . ஆதலால் , இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன் . ( முக்கிய குறிப்பு - இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல . சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள் ளேன் .) இலங்கைத் தமிழ்ச் சொற்கள் தமிழ் நாட்டுத் தமிழ்ச் சொற்கள் முகம்

நானும் வலையும் ( இது எனது 150வது பதிவு )

படம்
சிறுகச்சிறுகச் சேர்ந்த சொந்தங்களே வணக்கம். யாவரும் நலந்தானே! நான் எழுதிய ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் கற்பித்து ஆதரவு நல்கி என்னையும் உங்களில் ஒருவனாக வலையுலகில் இணைத்துக் கொண்டமைக்கு மனந்திறந்து நான் கூறும் முதல் வணக்கம் இது. “யாவரும் நலம்” சுசி யின் அழைப்பினை ஏற்று, நான் வலையமைப்புக்கு வந்த விதத்தினை எழுத நினைத்தபோதுதான் ஞாபகம் வந்தது இது எனது 150 வது இடுகை என்பது. அதனால் இந்த இடுகையிலேயே எனது வலையுலகப் பிரவேசம் பற்றிச் சொல்லிவிடுவது சிறப்பென நினைத்தேன். அதனால் விளைந்ததே இந்த இடுகையாகும். நான் இலங்கையைச் சேர்ந்தவன். 1992இல் நான் 9வது படிக்கும் போதுதான் முதன்முதலில் கவிதை எழுதியதாக ஞாபகம். அதன்பின் பல கவிதைகளை எழுதினேன். இருந்தாலும் 1999இல் “சரிநிகர்” சஞ்சிகையில் வந்த எனது முதல்ச் சிறுகதைதான் எனது (அப்போது வேறு பெயரில் எழுதினேன்) கலையுலகப் பயணத்துக்கான அத்திவாரமாக அமைந்தது. அதன்பின்னர் “இடி” , “தமிழ்கேசரி” , “வீரகேசரி” , “சுடரொளி” , “தினக்குரல்” , “வெளிச்சம்” முதலான பல சஞ்சிகைகளிலும் இன்னும் பல நினைவு

இருப்பு

படம்
மொழி புரியாத புதிய பட்டிணத்தில் வழிதவறி மாட்டிக்கொண்ட இருப்பின் வேதனை முகமிழந்து வாழும் மனிதரிடையே என்னை நான் தொலைத்தபடி மீண்டும் மீண்டும் தேடுகிறேன்

இருட்டிலிருந்து...

படம்
இருளின் மத்தியில் இரைச்சல் மிக்க வாழ்வு... முட்கள் நிறைந்த நெடுவழிப் பயணம்... சிதளூறும் ஊமைக் காயங்கள்... உள் வலியெடுக்கும் நினைவழியாப் பொழுதுகள்... மனதுள் பூட்டிய மௌனவலி உடலினுள் பரவும் கொடுந்தீயாகிச் சுடுகிறது... மாட்சிமை மிக்க என் உறவுகளே என் சிதைக்குத் தீ மூட்டியாவது நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....

ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 07 )

இடப்பெயர்வு அனுபவங்களும் போர்க்காலச் சித்திரிப்பும் 1995ஆம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வானது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக அப்போதைய காலத்தில் இருந்த ‘பூட்றஸ் பூட்றஸ் காலி’ கூடக் கண்டிக்குமளவிற்கு மிகவும் கொடுமையானதாக அமைந்திருந்தது. 1996ஆம் ஆண்டு ஏப்றல் 18இல் தென்மாராட்சி மீது மேற்கொள்ளப்பட்ட ‘சூரியக்கதிர்-2’ தாக்குதல் மூலம் , அதன் விளைவாக , இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்ற மக்களின் இடப்பெயர்வு அனுபவங்களினையும் புதிய பண்பாட்டுச் சூழலில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலையினையும், வாழ்வில் ஏற்பட்ட இடர்பாடுகளினையும் அவற்றினைக்கூடச் சுகமென எண்ணி மனநிறைவு காணும் தன்மையினையும் நின்மதியாக வன்னி மண்ணில் கிடைத்த சுகவாழ்வு அனுபவங்களினையும் , சுதந்திர உணர்வுச் சித்திரிப்பினையும் , இராணுவச் சூழலில் நின்று விடுபடத் துடிக்கும் மக்களின் அவல நிலையினையும் இக்காலக்; கதைகள் பதிவு செய்தன. அவலங்களுக்கும் அழிபாடுகளுக்கும் மத்தியிலே சிக்குண்டு சித்தம் கலங்கித் தடுமாறிப்போன மக்களின் அவலம் நிறைந்த , அகதி வாழ்வினை அவர்களின் கண்ணீர்க் கதையினை, போர்க்களத்திலே இராணுவத்திடம் சிக்குண்ட மக்களின் அவலம் நிறைந்