இடுகைகள்

அக்டோபர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி

படம்
நாள்:- 14 .10 .2000 உன் பேச்சு என் நெஞ்சில் தேன் வார்க்கும் உன் மூச்சு உள் மனதைத் தாலாட்டும் நாள்:- 15 .10 .2000 என் கண்ணும் உன் கண்ணும் சங்கமிக்கும் அந்தச் சங்கமத்தில் இருவருக்கும் சுகம் பிறக்கும் நாள்:- 16 .10 .2000 உன் மனமும் என் மனமும் கவி வடிக்கும் உன் மௌன மொழிக் கூட்டினுள்ளே காதல் பிறக்கும் நாள்:- 17 .10 .2000 உன் செவ்விதழில் பல்வரிசை பேச்சுரைக்கும் அந்தப் பேச்சினிலே என் நெஞ்சில் தேன் சுரக்கும் நாள்:- 18 .10 .2000 நீளும் நாட்களிலே நீதான் என் உயிர் மூச்சு வீசும் காற்றினிலும் மெதுவாய் உன் சலனம் நாள்:- 19 .10 .2000 என் இதயத்துள் புகுந்து கொடி நாட்டினாய் உன் வெட்கத்தால் என்மேல் வலை வீசினாய்

தேடுகிறேன்...

படம்
கொடிய இருளில் கைவிடப் பட்ட ஆத்மாவாய் காற்றில் என் புன்னகையை விட்டெறிந்து விட்டு கை நனைப்பதர்க்காய் நீர் தேடுகிறேன் சுடுகாடாகிப்போன என் கிராமத்தில்

அனைவரும் வருக

படம்
நாளை வெள்ளிக்கிழமை ( 15 /10 /2010 ) மித்ர நிறுவனம் நடாத்தும் " நூல் அரங் கேறும் மாலை " நிகழ்வு :- சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகத்தின் அண்ணா சிற்றரங்கில் நடைபெற உள்ளது. நூலாசிரியர் - வி. டில்லிபாபு ( DRDO விஞ்ஞானி ) நூல் - " ஒரு செல் உயிரிகள்" அனைவரும் வாரீர் நன்றி -தியா- ( மித்ர ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன் ) கோடம்பாக்கம்

இது இப்போது பிசாசுகளின் காலம்

படம்
பழைய கவிதைப் புத்தகங்களை ப் பரப்பியபடி படுத்துறங்கும் பிசாசுகள் ... இருளில் இருந்து மீள மறுத்து முட்டி மோதுகிறது இடர் சமர் நடந்த தேசத்தின் சிதைவுகளில் இருந்து மீளமுடியாமல் திண்டாடுகிறது கந்தக வாடை நியூட்டனின் மூன்றாம் விதியை நிலத்துக்கும் வானுக்கும் கற்பிதம் செய்யும் ராணுவ முலாம் பூசப்பட்ட போதி மரங்கள் திணிக்கப் படுவதற்காய் இலவசமாக்கப்பட்ட நிர்வாண பௌத்தம் கக்கிய கட்டிடங்கள் எம் மண்ணில்

இருளும் நானும்

படம்
இயலாமைகளுக்குள் வாழ்ந்து பழக்கப் பட்டவன் நான் மீண்டும் மீண்டும் குழி தோண்டிப் புதைத்துவிட முயல்கிறேன் என் இயலாமைகளை என்னையும் மீறி அது வீறுகொண்டு என்னை அடக்கியாள நினைக்கிறது ... பெரும் இறுமாப்புடன் கடிவாளம் பூட்டிய குதிரையாக என்னைக் கட்டியாள நினைக்கிறது உருவமில்லாத அந்த மர்மம் ... ஆனாலும் இயலாமைகளுக்குள் வாழ்ந்து பழக்கப் பட்டவன் நான்

காதலியின் விசித்திர ரசனை

படம்
என் அன்புக்கினிய நெஞ்சே... என் பொய்க் கோபம் கண்டு என்னவர் அடைகின்ற துன்பத்தை சிறிது நான் ரசிக்கவேனும் .... என் கைகளுக்கு உத்தரவிடு என்னவரை ஒரு கணமேனும் கட்டித் தழுவாமல் இருக்க.... புல்லாது இரா அப் புலத்தை அவர் உறும் அல்லல் நோய் காண்கம் சிறிது திருக்குறள் - 1301