பிப்ரவரி 10, 2012

காதலி தினம்

என் காதலுக்கு 

உயிரோட்டம் தந்தவளே 

ஒற்றை வார்த்தைச் 

சொல்லில் கட்டிப் போட்ட

வித்தகியே...


இந்த நாளில் 

உன் வாய் திறந்து 

நீ உரைத்த 

தித்திக்கும் செந்தமிழே 

இன்னும் என் 

செவியில் உன் 

நினைவுகளை மீட்டும் 

தாரகை மந்திரமாய்...


ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு வழியிலும் 

என் சிறந்த தோழியாய் 

நீ....


நீ என் இனிப்புப் பெட்டகம் 

அன்பான வார்த்தைகளின் 

சொந்தக்காரி 

கண்களில் 

வைரக்கல் பதித்த 

காதல் ஓவியம் 

நீ உன் செவ்விதழ் என்ற 

காதல் ரோஜாவால் 

என் இதயத்தில் 

பூச்செண்டு முடித்து வைத்தாய்.


உன் மென் விரல்கள் 

என்னைத் தொடும் போதெல்லாம் 

என் இதயம் 

மெல்லிய வெப்பத்தை 

உணர்கிறது.


உண்மையில் நீ 

என் இரத்த ஓட்டமாக 

இருப்பதால் தான் 

நான் - நீ - 

'நாம்' என்றானோம் போலும்.


நீ என் வாழ்க்கைக்கு 

பொருள் கொடுத்திருக்கிறாய் 

நானும் பதிலீடாக 

என் வாழ்நாள் முழுவதையும் 

உனக்கே தந்திருக்கிறேன்


என் இதயம் 

கலவரத்தால் நிரப்பப் பட்டபோது 

ஒளி நிரப்பி புதுப்பித்தவளே 

என் இனிய தோழியே


நம் ஆத்மாவை 

ஒன்று சேர்த்து நெருக்கம் தந்த 

இறைவனுக்கு நன்றி செய்ய 

நாம் இருவரும் 

நமக்கு கிடைத்த இரு 

செல்வங்களுடன் 

என்றும் காதலராக 

மகிழ்வுடன் நிறைவாக 

வாழ்ந்து காட்டுவோம்.





ஜனவரி 19, 2012

என் தேவதை

உன் இருண்ட முடியும் 
நீண்ட கூரிய மூக்கும் 
என்னைக் குஷிப்படுத்தும் 
அழகிய இரு சாதனங்கள் 
நான் உனக்கு ஒரு 
செவ்விதழ் ரோஜா கொடுத்துப் 
பின் ஒரு சிறு 
முத்தமிட்ட பின்னர் 
உன் காந்தக் கண்கள் 
இயக்கம் பெற்றன.

அது அமைதியான 
என் மனதில் 
ஒரு சலனத்தை 
விதைத்துச் சென்றது.

மென்மையான உன் குரலும் 
செவ்விதழில் புன்னகையும் 
நீண்ட நேரம் நிலைக்கவில்லை
நான் உட்கார்ந்தேன் 
உன்னுடன் 
நிரந்தர சொல்லாடலுக்காக

அதற்கான முயற்சியில்
தோற்றுப் போய் நான் 
மீண்டும் வேதாளமாய் நீ
எட்ட நின்று ஹாய் சொல்லி 
பின் ஹலோ சொல்லி 
கையசைத்துப் பிரிந்தாய் 
அந்த அற்புதக் கனவில் 
மிதந்தபடி இன்றும் நான்