இடுகைகள்

மார்ச், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வணக்கம் விடைபெறுகிறேன்....

சிறு விபத்தில் சென்ற வாரம், எனது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தட்டச்சு செய்ய முடியவில்லை. ஆகவே சிறிது காலம் வலைத்தளத்தில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். மீண்டும் விரைவில் சந்திப்போம். நன்றி வணக்கம்.....................

கிரிக்கெட் பற்றிய எனது சிறிய விருப்பத் தெரிவு

நண்பர் பிரபாகர் ( எண்ணத்தை எழுதுகிறேன்... ) கிரிக்கெட் தொடர் பதிவு ஒன்று எழுதியிருந்தார் அதைப் படித்த நேரம் முதல் நானும் ஒரு பதிவு இடலாம் என்று நினைத்தேன்..... அதன் விளைவே இது. நம்மளுக்கெல்லாம் கிரிக்கெட் ஒத்துவராதுங்க நம்ம ரேஸ்ரே வேற. நாங்க கால்பந்து பிரியருங்க..... நமக்கு ரொனால்டோ, கிறிஸ்ரியான ரொனால்டோ,ரோரல்டினோ என்று ஒரு நீண்ட பட்டியல் தான் பிடிக்குமுங்க.... ஆனாலும்....... கிரிக்கெட் பற்றிய எனது சிறிய விருப்பத் தெரிவு... பிடிச்சிருந்தாலோ பிடிக்காவிட்டாலோ உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...... விரும்பினால் நீங்களும் ஒரு கிரிக்கெட் தொடர் பதிவு போடுங்கோ....... 1.பிடித்த கிரிக்கெட் வீரர் – ஸ்டிவ்வாவ் (அவுஸ்), சச்சின் டெண்டுல்கர்(இந்), ஜாக் காலிஸ் (தெ.ஆ) 2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் – ரிக்கி பாண்டிங் 3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் – வாசிம் அக்ரம்(பாக்), கிளன் மெக்ராத்(அவுஸ்) 4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் - ஸ்ரீசாந்த் (இந்) 5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் - முத்தையா முரளிதரன்(இல), ஷேன் வார்ன்(அவுஸ்), டானியல் விக்ரோரி(நியுஸ்) 6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் - கர்பஜன் சிங்(இந்)

பிச்சைக்காரனின் ஓட்டு

நம்மூர் புகையிரத நிலையம் நான்கு அடுக்குப் பாதைகள் நாலா பக்கம் மக்கள் வெள்ளம் நாற்பது பிச்சைக்காரர் நாறுகிறது நம் நகரம்... பொருளாதார நெருக்கடி நேற்றைய நாள் - வேலை தேடினேன் இன்றைய நாள் - வேலை தேடுகிறேன் நாளைய நாள் - வேலை தேடுவேன்... பிச்சைக்காரனின் (தேர்தல்)ஓட்டு நேற்றுவரை பிச்சை எடுத்தேன் இன்று நான் பிச்சை போடுகிறேன்...

குழந்தைகளும் வாழ்கிறார்கள்........

நான்கு சுவருக்குள் நடந்த நாடகம் நம் வீட்டு வரவேற்பறை வரை...

தேவதைகள் உலவுகிற தேசம்

படம்
மீண்டும் கோடை எட்டிப் பார்க்கிர்றது எங்கள் ஊரின் நினைவுகளைச் சுமந்தபடி நிழற்படமாய் நான்..... கோடை எங்கள் ஊரின் வசந்த காலம் ..... நெல்மணிகள் புதிதெடுத்துப் பொங்கலிட்ட பின்னாளில் சூடடிப்போம் - பின்னர் 'பொலி' பெருக்கி வீட்டினிலே அடுக்கி வைப்போம் மூட்டைகளில்....... காக்கைகள் கூடு கட்ட இடம் தேடும்.... குயில்கள் தேடிவந்து முட்டை போடும்..... பட்ட மரம் தேடிவந்து மரங்கொத்தி துளைபோடும்.... கிளிகள் குஞ்சு பொரித்து அங்கு குடும்பம் நடத்தும்...... மாரியம்மன் கோயிலிலே திருவிழா நடக்கும்.... மான்கள் நீர் தேடி - நம் குளக்கரைக்குப் படையெடுக்கும்.... பாம்புகள் கூடிப் பிணைந்து மீண்டும் மீண்டும் சல்லாபிக்கும்..... காளைகள் கொம்புக்கு மண்ணெடுக்கும்..... வற்றிய குளத்தில் சிலர் வரால் பிடிப்பர்...... மா பழுக்கும்..... புளி காய்க்கும்...... தேன் சுவையுடன் பலாச் சுளை தித்திக்கும்..... இளநீர் குலையுடன் இறக்கிவந்து தாகம் தீர்ப்போம் ....... வாழைத்தோட்டம் நடுவினிலே சோளப்பொத்தி முறித்துப் போட்டு தீயினிலே வாட்டி ருசித்திடலாம்...... ஆற்றினிலே நெய்வாளை