செப்டம்பர் 28, 2009
எங்கள் செல்லக்குட்டிக்கு பிறந்தநாள்
செப்டம்பர் 25, 2009
ஆறாந்திணை - 05

செப்டம்பர் 24, 2009
ஆறாந்திணை - 04

மலையொத்த மனிதரெல்லாம்
ஏதிலியாய்வாழ்விழந்து
ஒருவர் பின் ஒருவராக
சிறைப்பட நடந்தனர்.
சிறுமலைகள் கூடிநின்ற
பூமியைப் புறங்கண்ட
பின்னொரு நாளில்
மலைக்காடுகள் ஒன்றுகூடி
மலைகளை மெல்ல மெல்லத்
தின்றுகொண்டிருந்தன.
மக்களையும் மண்ணையும்
நீண்ட மலைத் தொடர்கள்
பிரித்துக் கூறு போட்டபோது
சூரியன் மலை இடுக்கில்
விழுந்து இறந்து போனான்.
நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக
உதிர்ந்துகொண்டிருந்தன.
நிலவு தேய்ந்து தேய்ந்து
மறைந்து போனது.
இன்னும்....
மனிதர் மட்டும் ஏதிலியாய்
இழந்தவற்றை நினைத்தபடி
வான் பார்த்து............
செப்டம்பர் 22, 2009
இனி சினிமா.....?
கண்ணீர்
செப்டம்பர் 20, 2009
ஆறாந்திணை - 03

எம் மனம் போல்
பெருகி வந்து உயிர் குடித்து
மணல்த் திட்டால் மூடி
செப்டம்பர் 19, 2009
ஆறாந்திணை - 02
முல்லை:- காடும் காடு சார்ந்த இடமும்

ஆயிரமாயிரம் நினைவலைகள்
முட்டி மோதின.
நினைவழியாப் பொழுதுகளில்
உடும்பு முயல் மான்
வேட்டையாடிய காடுகள்
தனிமையில் உறையக் கண்டேன் .
காட்டாற்றின் கரையினிலே
கதையளந்த காலம் போய்
மாயத் தோற்றங்கள்
மனத் திரையில்
கோலமிடக் கண்டேன்.
மவுனமாக வரையப்பட்ட
என் கவிதையின் வரிகள் போல்
அசைவற்றுக் கிடக்கிறது
என் பூர்வீகக் காடு.
செப்டம்பர் 18, 2009
தாய்

செப்டம்பர் 17, 2009
தொடரும் காதல்

இப்போதுதான்
பத்து ஆண்டுகள் கழித்து
திரும்பி வந்திருக்கிறேன்.
எம் இரு விழிகள் சந்தித்து
கதைபயின்ற அந்தக் கட்டிடம்
வெட்டிச் சாய்க்கப்படாமல்
இன்னும் கிளை விட்டு
நிழல் பரப்பும் பெருமரம்...
'சில்' என்ற காற்று வீசும்
பெருவெளி மைதானம்
கல்லில் வடிக்கப்பட்ட இருக்கைகள்
எல்லாம் அப்படியே இருந்தன
எம் இருவரது இதயம் போல்.
பெருமரத்தின் நிழற்பரப்பில்
நிலம் மறைத்துப் போர்வையாக
உதிர்ந்திருந்த இதழ்கள்
காற்றில் தாளம் போட்டன.
எம் கண்கள் கதை பயின்ற
பல்கலை வளாகம்
இப்போது அந்நியமாய் போனாலும்
எம் இருவர் காதல் மட்டும்
வாழ்வாகி வலம் கொளிக்க
கண்டேன் இன்று.
செப்டம்பர் 16, 2009
ஆறாந்திணை - 01

எதுவும் விதைக்கப்படாத
வயல்வெளிகள்
யாரும் புதிதெடுக்காத
தரிசுநிலங்களாக…
கண்மூடித் திறப்பதற்குள்
கற்சிலையாய் அமைந்துபோன
மனிதர்கள்
வாழ்தல் எப்படிக் கொடூரமானது?
கரடுமுரடான பாதை போல்
கடினமானதா என்ன?
எதுவுமே புரிவதில்லை…
கால் பதிக்க முடியாத
சேற்று வயல்வெளிகள்
கட்டாந்தரையாகிக்
கண்ணீர் வடிக்கக் கண்டேன்.
ஆற்றுப்படுக்கைகளில்
ஆங்காங்கே
பிளவுகள்.. வெடிப்புகள்.
உடைப்பெடுத்துப் பாயும்
வெற்றுக்குளங்களில்
செத்துக் கிடந்தன
நீர்க்காக்கைகள்.
குளக்கட்டின் மரநிழலில்
சிலையாகச் சமைந்திருந்தார்
பிள்ளையார்…
செப்டம்பர் 15, 2009
காதல் வானம் - பாகம் - 03

வளரும் ......
செப்டம்பர் 13, 2009
பேசும் பேனாமுனை
செப்டம்பர் 12, 2009
மனிதாபிமானம்

செப்டம்பர் 11, 2009
காதல் வானம் - பாகம் - 02
செப்டம்பர் 10, 2009
பள்ளிக்கூடம்

செப்டம்பர் 09, 2009
மழை பற்றி...
செப்டம்பர் 08, 2009
காணாமல் போனவன்

காதல் வானம் - பாகம்-01
திஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிங்கினியாட…”
பக்தி மயமாக கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருந்தது.
“திக்கற்றோருக்கு தெய்வமே துணை… முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை”
செண்பகம் கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள்.
தன்னுடைய குடும்ப குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் கேட்பார்கள். இடையிடையே மணியம் விதானையார் மைக்கைப் பிடித்து பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
பூசாரி ஆறுமுகம் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். மஞ்சள் சால்வை கட்டிய சில தொண்டர்கள் அங்குமிங்கும் அவசரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.
செண்பகமோ எப்ப திரை விலகும் எப்ப முருகனருள் கிடைக்கும் என விழிகள் அகலத் திறந்து முருகன் சந்னிதியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஊரின் ஒரேயொரு சைவக் கோயில் அந்த சிறிய முருகன் கோயில்தான்.
குளக்கட்டுப் பிள்ளையாரும் முருகனும் தான் அவளுடைய நீதிமன்றங்கள். இருபது வருஷத்துக்கு முதல் யாழ்ப்பாணத்திலை இருந்து முருகன் வேல் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்த போது முன்னின்று உழைத்தவர்களில் இவளுடைய கணவன் அம்பிகைபாலனுக்கும் பெரும் பங்குண்டு.
முருகன் கோயில் அமைந்துள்ள இரண்டேக்கர் காணியில் அரை ஏக்கருக்கு சொந்தக்காரனும் இவன்தான். தன்னுடைய விடா முயற்சியாலும் உடல் வலிமையாலும் நிலத்தைப் புரட்டி எடுத்து தொழில் செய்யும் விவசாயிகளில் அம்பிகைபாகனும் ஒருவன். முறுக்கேறிய உடல் திரண்டு பருத்த கைகள் மண்ணிறத்திலான கேசம் என ஐம்பது வயதாகி விட்டது என்ற அடையாளமே இன்றி அவனது தோற்றம் அமைந்திருந்தது.
வேலியோரம் இருந்த புல் பூண்டுகளை செதுக்கி கோயில் சூழலை துப்புரவாக வைத்திருப்பதில் கண்ணுங் கருத்துமாய் இருந்த அவனுடன் சில இளவட்டங்களும் கூடித் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இடையிடையே தன் கணவனின் பார்வைப் பரிமாற்றத்தை ருசித்த வண்ணம் கந்தன் அருளுக்காக ஏங்கிக் கிடந்தாள் செண்பகம். ஆனால், சில நிமிஷங்களில்…
“அக்காள் உன்னைக் கண்டு பிடிக்கவே முடியல்லை… அந்தப் பக்கம் சமையல் வேலை நடக்குது மரக்கறி வெட்ட ஆளில்லையக்கா வாறியே…”
அவளுக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. இருந்தாலும்,
“முருகன் சன்னிதி தானே… நாங்கள் என்ன உவையளுக்கே பணிவிடை செய்யிறம் முருகனுக்குதானே”
என்ற முடிவுடன் எதுவும் பேசாமல்,
“உம்”
என்றபடி எழுந்து நடக்கத் தொடங்கினாள். அப்போது வேலியோரம் அம்பிகைபாலன் யாரோ கொடுத்த தண்ணீரை ஒரு மூச்சு பிடித்துக்கொண்டிருந்தான். சமையல் வேலையில் எல்லோரும் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். செண்பகம் தன்பாட்டில் மரக்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவளருகில் வந்து அமர்ந்தாள் செல்லம்மா கிழவி.
வரிஷத்திலை ஒருமுறை வாற பெரிய விழாக்களில் இதுவும் ஒன்று என்பதனால் ஊரிலுள்ள எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவதுதான் வழமை.
“என்ன பெத்தா எப்பிடியணை இருக்கிறியள்”
செண்பகம்தான் முதலில் பேச்சு கொடுத்தாள்.
“ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில இருக்கிறம் மோனே”
என்றவாறு இன்னும் அருகில் வந்தாள் கிழவி. ஊரிலை உள்ள பழைய கால மனிசர்களில் கிழவியும் ஒருத்தி. 'பெத்தா' என்றால் தான் ஊரிலை எல்லாருக்கும் தெரியும். மனிசி பதினொன்று பெத்ததாலயோ என்னவோ பெத்தா என்ற பெயர் நிலைச்சு விட்டது. காசி பெரிய வேட்டைக்காரன் “காசிக்குஞ்சியின் மனிசி” என்றால் ஊரிலை ஒரு தனி மரியாதை.
“என்ன மோனே உன்ரை பொட்டை எப்பிடி இருக்கிறாள் மோனே… வெளியிலை வாறதையே காணல்ல”
என்றாள் கிழவி.
“அவள் பெத்தா தானுண்டு தன்ரை வேலையுண்டு என்று வீட்டுக்கையும் தோட்டத்துக்கையுமாய் அடங்கிக் கிடக்கிறாள்… இப்பதானேணை கம்பஸ் முடிச்சு வந்தவள் வேலையும் கிடைக்கலை அதுதான்…”
“அது சரி மோனே உதுகள் உங்கடை இனசனம் இருக்க… பெட்டைக்கு மாப்பிளை எடுக்கேலாமல் போட்டுதே உங்களாலை…அதுவும் மூத்தவள் இருக்க இளையவளுக்கு அதுக்குள்ளை என்னமோனே அவசரம் வந்து வெளியிலை பிடிச்சு அனுப்பினிங்கள்… ஏதோ நடக்கட்டும்… நெருப்பில்லாமல் புகையுமே…”
என்றாள் மிகவும் தாழ்ந்த குரலில்.
“உதெல்லாம் ஆரணை உனக்கு சொன்னது?”
என்றாள் சற்று இறுகிய குரலில்.
“உதுக்கே மோனே ஊரிலை ஆக்களில்லை… உன்ரை கொண்ணன் பொஞ்சாதிதான் சொன்னவள்…”
பெரிய சக்கரைப் பூசணிக்காயை உருட்டிச் சீவியபடி கிழவி சொல்லிக்கொண்டிருந்தாள். செண்பகம் குரலில் ஒரு நிராசையுடன்,
“வேற ஒண்டும் சொல்லலையோ?”
என்றாள்.
“இல்ல மோனே ஏன்?”
ஓன்றுமில்லை என்பது போல் தலையசைத்து விட்டு,
“நான்…நான்…போக வேணுமணை பூசை தொடங்கப் போகுது போல கிடக்கு…”
என்றபடி மெதுவாக எழுந்தாள். அவளுக்குள் பெரும் மனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தச் சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையிலும் அதனை மறக்க அவள் மனம் ஒப்பவில்லை. நடந்த அந்த சம்பவம் தானே இத்தனைக்கும் காரணம். அது நடந்திராவிட்டால் இண்டைக்கு… ............
வளரும் ......
செப்டம்பர் 07, 2009
ஒற்றை வார்த்தை
செப்டம்பர் 06, 2009
இனிவரும் காலம்...

செப்டம்பர் 01, 2009
அதிரூப நாயகியே

கனிவு தெரிகிறது
உதடுகள் எதையோ
சொல்ல நினைக்கிறது
புருவம் உயர்ந்து
விரிந்து எழுந்து
தாளம் போடுகிறது
கூந்தல் வழிந்து
தோளில் தவழ்ந்து
நளினமாடுகிறது
போட்டுமின்றி
பூவுமின்றி-உன்
பிறைநுதலில் ஒரு
அழகிய கோலம் கண்டேன்
அலங்காரம் ஏதுமின்றி
அழகாகத் தெரிகிறாயே
அதிரூப நாயகியே
கருணை மலை பொழிந்து
காட்சி தரும் கன்னிகையே
இத்தனை அழகாக
உனைப் படைத்தான்
தாள் வணக்கம்
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...