கண்ணீர்


ஊனை உருக்கி

உடலை வருத்தி

தினம்

சோற்றுக்கு வழியின்றி

சொந்த மண்ணைப் பிரிந்து

அகதி முகாமில்

இடர்படும் தமிழன்

உண்ட சோற்றில் உப்பில்லை

கண்ணீர் துளி விழுந்து

கசக்கிறது சோறு…

கருத்துகள்

  1. இதற்கு முந்தைய கவிதையான ஆறாந்திணை - 03 என்னைக் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
  2. //உண்ட சோற்றில் உப்பில்லை

    கண்ணீர் துளி விழுந்து

    கசக்கிறது சோறு… //

    வரிகளில் தெரிகிறது வலி:(!

    பதிலளிநீக்கு
  3. நன்றி நந்தா(அணையா)விளக்கு
    //
    இதற்கு முந்தைய கவிதையான ஆறாந்திணை - 03 என்னைக் கவர்ந்தது
    //
    புரிகிறது இது பிடிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  4. //
    வரிகளில் தெரிகிறது வலி:(!
    //

    விழுந்தால்தானே நோவு தெரியும்

    நன்றி ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  5. வலி கூட உங்கள் கவிதையில் அழகாகிறது தியா

    பதிலளிநீக்கு
  6. வலிகண்டு தானே வழி பிறக்கும் . நம்பிக்கையுடன் காத்திருப்போம் . வரும் காலங்களில் வழி ஒன்று பிறக்குமென்று ....வலிக்காமல் வாழ்கை இல்லை.

    நிலாமதி அக்கா

    பதிலளிநீக்கு
  7. //
    வலி கூட உங்கள் கவிதையில் அழகாகிறது தியா
    //


    நன்றி வானம்பாடிகள்
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. //
    வலிகண்டு தானே வழி பிறக்கும் . நம்பிக்கையுடன் காத்திருப்போம் . வரும் காலங்களில் வழி ஒன்று பிறக்குமென்று ....வலிக்காமல் வாழ்கை இல்லை.
    //

    நன்றி நிலாமதி அக்கா
    உங்கள் பதிலுக்கு நன்றி

    நீங்கள் சொல்வது உண்மைதான்
    ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  9. உதயங்கள் சுடுவதில்லை
    அஸ்தமனங்கள் அழிவதில்லை
    இதில் வரும் வாழ்வு மட்டும்
    புரிவதில்லை..

    உதடுகளின் வார்த்தைகளை
    இனம் கண்டு பல
    இனம் கொன்ற தேசத்தில்
    அகதிகளாய்
    கதியின்றி கண்ணீர் சிந்திடிடும்
    உள்ளங்களுக்கும் விடியல் தாராயோ!
    ஆதவனே..

    என் பங்கிற்கும்...

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. நன்றி சந்தான சங்கர்

    உங்கள் கவிதை உண்மையின் உரைகல்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி