செப்டம்பர் 06, 2009

இனிவரும் காலம்...


உலகம் இப்போ

ஒரு உருண்டை வீடு

அதில் மனிதர் எல்லாம் -தினம்

அலையும் வெறும் கூடு


இயந்திரங்கள் மனிதராகி

வேர்வை சிந்தாது உழைக்கலாம்

மனிதரெல்லாம் ஒன்று கூடி

இயந்திரமாய்ப் பிளைக்கலாம்


காலம் போற போக்கில் நாளை

கலியாணங்கள் நடக்கலாம்

ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத

தம்பதியர் கூடியே

தத்துப் பிள்ளை தத்தெடுக்க

இயந்திரங்கள் சமைக்கலாம்


வீட்டுக் காவல் வேலைகென

இயந்திரத்தில் நாய்களாய்

தோட்டம் முதல்

தொலைவு வரை

ஓடியோடி உழைத்திட

இயந்திரமாய் மனிதனை

சந்தையிலும் வாங்கலாம் .



7 கருத்துகள்:

  1. காலம் போற போக்கில் நாளை


    கலியாணங்கள் நடக்கலாம்


    ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத


    தம்பதியர் கூடியே


    தத்துப் பிள்ளை தத்தெடுக்க


    இயந்திரங்கள் சமைக்கலாம்

    அழுத்தமான எள்ளல். இப்படிக்கவிதைகள் படித்து மிக நாளானது
    அருமை தியா, அருமை.

    பதிலளிநீக்கு
  2. நன்றி காமராஜ்
    உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும்...

    பதிலளிநீக்கு
  3. "நடக்கலாம் இல்ல நடக்கும்..."


    நன்றி வசந்த்

    பதிலளிநீக்கு

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-