ஒற்றை வார்த்தை


வேலை முடித்து

மாலை வேளையில்

சாலை நெரிசலில்

சிக்கித் தவித்து

விரையும் வண்டியில்

வீடு விரைந்து

இருட்டும் பொழுதிலே

கட்டியணைத்து

நெஞ்சில் புதைத்து

முத்தம் கொடுத்து

ஆரத் தழுவி

உச்சி மோர்ந்து

உள்ளம் குளிர

என்

செல்லக் குழந்தை

சொல்லி அழைக்கும்

"அம்மா" என்ற

ஒற்றை வார்த்தையில்

அத்தனை களைப்பும்

அமுங்கிப் போகும்

கருத்துகள்

  1. //"அம்மா" என்ற
    ஒற்றை வார்த்தையில்
    அத்தனை களைப்பும்
    அமுங்கிப் போகும் //

    உண்மைதான் அனுபவிக்க வேண்டிய வரிகள்...

    கவிதை நல்லாயிருக்கு நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. //உண்மைதான் அனுபவிக்க வேண்டிய வரிகள்...

    கவிதை நல்லாயிருக்கு நண்பரே...//


    நன்றி பாலாஜி

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி