ஆறாந்திணை - 02

முல்லை:- காடும் காடு சார்ந்த இடமும்



ஆயிரமாயிரம் நினைவலைகள்


முட்டி மோதின.


நினைவழியாப் பொழுதுகளில்


உடும்பு முயல் மான்


வேட்டையாடிய காடுகள்


தனிமையில் உறையக் கண்டேன் .


காட்டாற்றின் கரையினிலே


கதையளந்த காலம் போய்


மாயத் தோற்றங்கள்


மனத் திரையில்


கோலமிடக் கண்டேன்.


மவுனமாக வரையப்பட்ட


என் கவிதையின் வரிகள் போல்


அசைவற்றுக் கிடக்கிறது


என் பூர்வீகக் காடு.

கருத்துகள்

  1. //என் கவிதையின் வரிகள் போல்
    அசைவற்றுக் கிடக்கிறது
    என் பூர்வீகக் காடு. //

    உணர்வுப்பூர்வமான வரிகள். அழுத்தமான கவிதை அன்பரே...

    பதிலளிநீக்கு
  2. //:(.என்ன சொல்ல.//


    ஏதாவது சொல்லுங்கள்
    சொல்லாமல் விடாதீர்கள்

    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  3. //

    உணர்வுப்பூர்வமான வரிகள். அழுத்தமான கவிதை அன்பரே...

    //

    நன்றி க.பாலாஜி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி