என் கவிதையில் இருந்து ஒரு பகுதி...
என் நித்திய கனவில் அடிக்கடி,
கடவுளின் கழுத்தைச் சுற்றியபடி பாம்பு இருந்தது.
கடவுள் என் பரிசுத்தமான இரகசியங்களை,
அறிந்து வைத்திருக்கலாம் என்ற பரிபூரண நம்பிக்கையில்,
அவரின் காலடியில் மண்டியிட்டு விழுவேன்.
பின் எழுவேன், பின் விழுவேன் - இது
அடிக்கடி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
-தியா-