இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் இனி

படம்
தமிழ் மொழி நம் தாய்மொழி தமிழாகும். உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி. அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி. 9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி. கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி. தமிழ் மொழி இதுவரை இழந்தவை அகத்தியம் பெருநாரை பெருங்குருகு முதுநாரை முதுகுருகு பஞ்சமரபு பஞ்சபாரதீயம் பதினாறு படலம் வாய்ப்பியம் இந்திரகாளியம் குலோத்துங்கன் இசைநூல் முதலிய எண்ணற்ற அரிய நூல்களும் கல்வெட்டு முதலிய எண்ணற்ற ஆதாரங்களும் தமிழ் வாழும் இடங்கள் தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர் மலேசியா பர்மா மொரீசியஸ் தென்னாபிரிக்கா கயானா பிஜி சுரீனாம் ட்ரிடாட் டொபாகோ போன்ற நாடுகளில் பூர்வீகத் தமிழர் உள்ளனர். ஆனால் எல்லா நாட்டிலும் தமிழ் பேசப்படவில்லை. தமிழுக்குரிய இடம் 1996 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்கள் பேசும் மொழியாகத் தமிழ் இருந்தது. அப்பட்டியலின்படி தமிழுக்கு உலக மொழிகளி

வலி சுமந்த பயணம்

படம்
விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது… ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது…                                                                                             (விழியிரண்டும்……) சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்… முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப் பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்…                                                                                                (விழியிரண்டும்……) பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே ஏதிலியாய்ப்  பாவியராய் பயணிக்கும் நேரமிது… வேறுதுணை யாருமின்றி வேறுவழி ஏதுமின்றி மிச்சசொச்ச உசிரை நாங்கள் தக்க வைக்கும் பயணமிது…                                                                                             (விழியிரண்டும்……) பச்சை இளங்குருத்தை பாசமுள்ள கண்மணியை வேள்வியில் பறிகொடுத்து போகின்ற பயணமிது… கண்கள் சிந்து

வந்த காலம் இது வசந்த காலம்

சித்திரை தாண்டி வைகாசி வந்ததும் - நம்மூர் கத்திரி வெயில் தான் பட்டென மனதில் தோன்றி மறைகிறது இது இப்போது இனிய வசந்த காலம் புல்வெளி மூடிய பனிப்புயல் போய் புல்நுனி தூங்கும் பனித்துளி பார்க்கிறேன் கொட்டும் மழையில் வட்டக் குடைபிடித்து வசந்தத்தை நான் வரவேற்புச் செய்கிறேன் பனிப்பொழிவும் இனியில்லை கடுங்குளிரும் இங்கில்லை பார்க்கும் இடமெங்கும் பச்சை மயம் பசுந்தரையில் படுத்திடலாம் சோலையென வீடுதனைப் புதுப் பொலிவு பண்ணிடலாம் நதிகள் ஏரியென - இனி விடுமுறைக்குச் சுற்றிடுவர் முற்றும் மூடி முன்னர் வீதியிலே போனவர்கள் வெட்டவெளி மணலில் வெற்றுடலாய் ஓய்வெடுப்பர் பச்சை குத்தி நன்கு பளிச்சென்று உடல் தெரிய கச்சை போல் உடையைக் கவசமாய் அணிந்து நிற்பர் பச்சைப் பசேலென்று - இலை துளிர்ப்பதர்க்கு முன்னாலே முந்திவிடும் மொட்டுகள் மனிதர்கள் போலிங்கே மரங்களுக்கும் அவசரம் இலை துளிர்க்கும் முன்பே பூப்பூக்கும் பட்டென்று காய்த்துப் பழுத்துவிழும்   மான் துள்ளும் முயல் கொஞ்சும் அ

வ(ச)ந்த காலம் மாற்றம்

படம்
என்னுடைய இந்தக் கவிதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத் தமிழ் இதழான  பனிப்பூக்கள் இதழின்  04/16/2013  http://www.panippookkal.com/ithazh/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/   அன்றைய பதிப்பில் வெளிவந்தது  நேற்றைய மாலைப் பொழுதில் என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. . வசந்தகாலத்தின் வரவுக்கண்டு மரங்கள் குருத்தெறிந்து மொட்டுவிட்டுக்  கருத்தரிக்க கொட்டும் மழையில் தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து அம்மணமாக நின்றன. வீதியில் தொடை தெரிய நடைப் பயணம் போனாள்  ஒரு யுவதி. தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர். கடிகாரச் சிறு முள்ளின் ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம் வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து பதுங்கிக் கொண்டது பசுந்தரை ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை தொடர்ந்து பொழியும் வெண்பனியில் கருஞ்சாயம் போக்கி மீண்டும் வெ

குழந்தை மனசு

படம்
*******என்னுடைய இந்தச்  சிறுகதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள்   http://www.panippookkal.com/ithazh/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/ இதழின் இன்றைய பதிப்பில் வெளிவந்துள்ளது. ***** விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள்.   “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்”   “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…”   “ரெண்டு நாளோ… அப்ப  இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…”   நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் அப்படியே அமைதியாகி விட்டாள்.   இரண்டு மூன்று வாரங்களாக எமது தாய்நாட்டில் இருக்கும் உறவுகளின் புகைப்படங்கள், ஒளிப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவர்களைத் தன் மனதில் ஞாபகப்படுத்திப் பத்திரப் படுத்

நாடோடி நான்...

இன்று   எனக்கு   துக்கமான   நாளா   மகிழ்ச்சியான   நாளா   என்று   எதுவுமே   புரியவில்லை ...   எனது   நண்பர்களில்   ஒருவர்   இன்றுடன்   ஓய்வுபெறப்   போகிறார் .   அவருக்கு   எழுபது   வயதாகின்றது .   ஆனால்   ஓர்   இளைஞனுக்கு   இருக்க   வேண்டிய   அனைத்து   சுபாவங்களும்   நிறைந்த   ஓர்   அற்புதமான   மனிதர்   அவர் . இளமையான   வேகம் ...   துல்லியமான   பார்வை   வீச்சு ...   பரந்த   அறிவு ...   கண்ணியமான   நட்பு ...   இளமையான   உணர்வுகள்   அனைத்தும்   ஒருங்கே   கூடியவர் ...   அவர்   மெக்சிக்கோ   நாட்டைச்   சேர்ந்தவர் .   பொதுவாக   அழகான   பெண்களை   " ஏஞ்சல் "   என   அழைப்பார்கள்   ஆனால்   அவரின்   பெயர்   " ஏஞ்சல் " . எமது   ஓய்வறையில்   நாம்   என்றும்   நால்வர்தான்   ஒன்றாக   இருப்பது   வழக்கம்   இன்றிலிருந்து   அது   மூவராகக்   குறைகிறது   என   நினைக்கும்   போது   மிகவும்   கவலையாக   உள்ளது . இன்னொருத்தர்   எதித்திரியா   நாட்டைச்   சேர்ந்தவர் .   நல்ல   அரசியல்   ஞானம்   படைத்த   பேச்சாளர்கள்   கூட   அவருடன்   வாதம்   செய்தால்   தோற்றுப்போவது   நிச்சயம்