வலி சுமந்த பயணம்

valimai_sumantha_payanam_1_300x225.jpg


விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி
உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது…
ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து
உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது…
                                                                                            (விழியிரண்டும்……)

சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை
வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்…
முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப்
பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்…
                                                                                               (விழியிரண்டும்……)

பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே
ஏதிலியாய்ப்  பாவியராய் பயணிக்கும் நேரமிது…
வேறுதுணை யாருமின்றி வேறுவழி ஏதுமின்றி
மிச்சசொச்ச உசிரை நாங்கள் தக்க வைக்கும் பயணமிது…
                                                                                            (விழியிரண்டும்……)

பச்சை இளங்குருத்தை பாசமுள்ள கண்மணியை
வேள்வியில் பறிகொடுத்து போகின்ற பயணமிது…
கண்கள் சிந்தும் பூக்கள் தூவி… வலிகள் சுமந்து புது வழிகள் தேடி
வாய்கள் மூடி மௌனியாகி வாழ்தல் வேண்டி
கால்கள் போகும் பாதை நோக்கி நாங்கள் போகும் பயணமிது
                                                                                           (விழியிரண்டும்……)
- தியா -
 
 
இந்த பருவ http://www.panippookkal.com/ithazh/ ல் வந்த எனது படைப்பு 

கருத்துகள்

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி