பட்டிப் பசு
முலை சுரந்து
பால் சொரியும்
தொட்டியடி
தண்ணீரினால்
நிலம் நனைக்கும்
முற்றத்து பலாவினிலே
குயிலினங்கள் கீதமிடும்
குலையுடனே நுங்கிறக்கி
இளநீரால் தாகம் போக்கி
முற்றத்து நிலவினிலே
கூடி மகிழ்ந்திருந்தோம்…
மல்வத்து மாகாளி
உக்கிரங் கொண்டு
ஊழிக்கூத்து
ஆடியவேளையில்
அனல் பறந்தது…
என் முற்றத்து பலாமரம்
வேலியோர கிளுவை
கன்றுடன் பட்டிப்பசு
எல்லாமே மாண்டுபோயின
கூடவே என் வசந்தமும்…
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-