ஊழிக்கூத்து

பட்டிப் பசு
முலை சுரந்து

பால் சொரியும்
தொட்டியடி

தண்ணீரினால்
நிலம் நனைக்கும்
முற்றத்து பலாவினிலே
குயிலினங்கள் கீதமிடும்
குலையுடனே நுங்கிறக்கி
இளநீரால் தாகம் போக்கி
முற்றத்து நிலவினிலே
கூடி மகிழ்ந்திருந்தோம்…
மல்வத்து மாகாளி
உக்கிரங் கொண்டு
ஊழிக்கூத்து
ஆடியவேளையில்
அனல் பறந்தது…
என் முற்றத்து பலாமரம்
வேலியோர கிளுவை
கன்றுடன் பட்டிப்பசு
எல்லாமே மாண்டுபோயின
கூடவே என் வசந்தமும்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி