கல் நெஞ்சும் கசிந்துருக, இன்று
கையேந்தும் நிலை வந்தும்
சொல் பொறுக்காச் சோர்விலராய்
கைகட்டி நிற்காத ஏர் பிடித்த
நல் மனிதர் வல் வினையால் வாழ்விழந்து
வாழாவெட்டி ஆகி நின்று
நெல் மணிக்கும் வரிசை கட்டி
கையேந்தும் நிலை கொடிது.
பார் போற்ற வாழ்ந்திருந்து
பசி விலக்கி வாழ்ந்தவர்கள்
ஏர் பிடித்த கையாலே அள்ளி அள்ளிக்
கொடுத்தவர்கள்- வந்தாரை வரவேற்று
ஊர் மெச்ச உபசரித்தோர் நாதியற்று நடுத்
தெருவில் அகதியாய் அலைகிறாரே
போர் ஓய்ந்த பின்னாலும் ஊர் ஏக முடியாத
கொடுமையினை யாருணர்வார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-