4.5. தமிழறிஞர் சிலர் பற்றி…

1. புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை

காலம்: 1899-1978
பின்னணி: மட்டக்களப்பைச் சேர்ந்தவர்
திறமை: மரபுவழித் தமிழ் அறிஞர்
பல பட்டங்கள் பெற்றவர்
சிறந்த கவிஞர்
சிறந்த பேச்சாளரும், ஆசிரிய கலாசாலை அதிபரும், வசனகர்த்தாவும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.
உரைநடை நூல்கள் பலவற்றை எழுதினார்.
சிறப்பு: ‘வெண்பாவிற் புலவர்மணி’ எனப் பாராட்டுப் பெற்றார்.
நூல்கள்: பகவத்கீதை வெண்பா
புலவர்மணி கவிதைகள்
மண்டூர்ப் பதிகம்
விபுலாநந்தர் மீட்சிப்பத்து
உள்ளதும் நல்லதும்.

2. யாழ்ப்பாண பதுறுத்தீன் புலவர்

காலம்: 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
பின்னணி: இஸ்லாமிய அறிஞர்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
திறமை: சிறந்த தமிழ் மொழியறிஞர்
புலமையாளர்
நூல் முகைதீன் புராணம்-இது 2பாகம், 74படலம், 2983திருவிருத்தங்களுடன் இயற்கை வர்ணனை, அணிநலன் மிகுந்து விளங்குகின்றது.

3. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

காலம்: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி
பின்னணி: மட்டுவிலில் பிறந்தவர்
திறமை: மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்றுப் பின் மரபுவழித் தமிழறிஞராக இருந்தார்.
சிறப்பு: கம்பனைப் புகழ்ந்து பல கட்டுரைகள் எழுதினார்.
அகத்திணைக் கோட்பாட்டுக்கு விளக்கம் தந்தார்.
நூல்கள்: இலக்கியவழி
அத்வைத சிந்தனை
இன்னும்பல நூல்களும் கட்டுரைகளும்



4. தனிநாயகம் அடிகள்

காலம்: ஆங்கிலேயர் காலம்
திறமை: தமிழை இனியமொழி, ஆய்வுமொழி, உலகமொழி என நிறுவிக்காட்ட முயன்றார்.
உலகம் எங்கும் சுற்றிய தமிழ்த் தூதர்.
சங்க இலக்கிய ஆய்வின் தொடக்க கர்த்தா
சிறப்பு: ‘உலகத் தமிழாராய்ச்சி மையம்’ நிறுவினார்.
நூல்கள்: ஈழத்து இலக்கியத்தில் இவரது பணி காத்திரமானது. எண்ணற்ற நூல்களினை இயற்றி தூய தமிழில் வெளியிட்டு புரட்சி செய்தார்.

5. சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர்

பின்னணி: சுன்னாகத்தைச் சேர்ந்தவர்
மரபுவழித் தமிழறிஞர்
சிறப்பு: நாவலரின் காவியப் பாடசாலையில் ஆசிரியராக இருந்தார்.
புலமை: இலக்கணம், மொழி, இலக்கியம், வடமொழிப் புலமை பெற்றிருந்தார்.
நூல்கள்: இராமோதந்திரம், மறைசைஅந்தாதியுரை, யாப்பெருங்கலப் பொழிப்புரை, இலக்கண சந்திரிகை, தமிழ்ப்புலவர் சரிதம், யாப்பெருங்கலக் காரிகை (பதிப்பு), சிவதோத்திரத் திரட்டு (பதிப்பு), இலக்கியச் சொல்லகராதி போன்றனவும் தனிப்பாடல்கள் பலவும் இயற்றிய இவர் ‘கதிரவேற்பிள்ளை அகராதி’ இயற்றிய ஆசிரியர் குழாமில் ஒருவராக இருந்தார்.




அடிக்குறிப்பு

1. சிவத்தம்பி.கா, தமிழில் இலக்கிய வரலாறு, இரண்டாம் பதிப்பு, பக்93
2. மேலது, பக்89
3. சிவலிங்கராஜா.எஸ், ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, இரண்டாம் பதிப்பு, பக்98
4. பூலோகசிங்கம்.பொ, தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர்களின் பெரு முயற்சிகள், மீள்பதிப்பு, பக்98-101
5. மேலது, பக்129-130
6. சிவலிங்கராஜா.எஸ், மே.கு.நூல், பக்104-105
7. நடராசா.எவ்.எக்ஸ்.சி, ஈழத்து தமிழ்நூல் வரலாறு, பக்26
8. சிவலிங்கராஜா.எஸ், மே.கு.நூல், பக்108
9. அனந்தராஜ்.ந, ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள், பக்74-75
10. பூலோகசிங்கம்.பொ, மே.கு.நூல், பக்31-41
11. மேலது, பக்41
12. மேலது, பக்33-41
13. மனோகரன்.துரை, இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி, பக்91
14. மேலது, பக்90
15. மேலது, பக்90
16. மேலது, பக்74-75
17. சிவலிங்கராசா.எஸ், மே.கு.நூல், பக்107-112
18. மேலது, பக்100
19. பூலோகசிங்கம்.பொ, மே.கு.நூல், பக்51

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி