பேய் மழை…

அடை மழைப் பொழிவு
விண்ணதிரும் இரைச்சல்
நாய்களின் குரைப்பொலி
வேலியோரம் மழையில்
நனைகிறது வெள்ளாடு
இருளைக் கிழித்து
இரு கூறாக்கி
வேலி போட்டது மின்னல்
இடியின் பேரோசை
சன்னமாய் காதினில்…

விடிவின்றி நீண்டு கிடந்தது
பகலும் இரவாக..

கிழக்கின் திசையை
அறிய முடியாமல்
தோற்றுப் போனது மனசு…

கோடை வெயிலின்
வெப்பம் தணிய
கொட்டித் தீர்த்தது
பேய் மழை…

வெட்டவெளிகள்
நீரில் மூழ்கின
பற்றைக் காடுகள்
பதுங்கிக் கொண்டன
சதுப்பு நிலத்தில்
சப்பாத்துக் கால்கள்
கோலம் போட்டன…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி