எங்கள் அன்னைமடி

உச்சியிலே விரல் கோதி

நெற்றியிலே

திலகமிட்டு

முறத்தால் புலிவிரட்டி

மறத்தால் தலை நிமிர்ந்து

தனித் திறத்தால்

வளர்ந்து நின்று

வந்தோரை வாழவைத்த

அன்னைமடி எங்கள் வன்னி மடி…


நிறை குளங்கள்

பெருக்கெடுத்து

அருவி பாய

வாளை விரால்

துள்ளிவந்து

தாளம் போட…


வாழை பலா கமுகுடனே

வானம் பார்க்க

நெற்கதிர்கள் குனிந்து

மண்ணில் கோலம் போட…


மோதி விழும் காற்று

நல்ல வாசம் வீச

வண்டினங்கள் வந்து நின்று

கீதம் பாட…

இன்பமாக என்றும் நாங்கள்

வாழ்ந்த பூமி

கண்கலங்கி நிற்பதென்ன

முறையோ ஐயா…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி