வாழ்விழந்து
ஏதிலியாய்
வறுமையிலே வாடி வாடி
அனுதினமும்
அல்லற்பட்டு
அகதியாகி அலைகிறோமே
பெற்றதாயை ஊரினிலே
தவிக்க விட்டு வந்தபோதும்
அவள்
நற்றவங்கள் புரிந்ததனால்
நலமாக
நாங்கள் வாழ்வோம்
நற்றவங்கள்
புரிந்த தாயை
நலமாக வாழ வைக்க
அகதியென்ற பெயர்
அனுதினமும் உதவிடுதே
அகதியாகி
அசுல் வேண்டி
அடிமையாக
அலைந்த போதும்
பனிப்பொழிவில்
தினந்தினமும்
மாடாயுழைத்த போதும்
சொந்த மண்ணின் சுகமதனை
எந்த மண்ணும்
தந்திடாது
இந்த உண்மை புரிந்திருந்தும்
விதியென்று
விரும்பி ஏற்றோம்
அகதியாகி உலகமெங்கும்
அல்லல் பட்டு
அலைந்த போது
எமை நினைக்க நாள் குறித்த
ஐ.நாவே
உனக்கும் நன்றி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-