அகதியாகி உலகமெங்கும்

வாழ்விழந்து
ஏதிலியாய்
வறுமையிலே வாடி வாடி
அனுதினமும்
அல்லற்பட்டு
அகதியாகி அலைகிறோமே

பெற்றதாயை ஊரினிலே
தவிக்க விட்டு வந்தபோதும்
அவள்
நற்றவங்கள் புரிந்ததனால்
நலமாக
நாங்கள் வாழ்வோம்
நற்றவங்கள்
புரிந்த தாயை
நலமாக வாழ வைக்க
அகதியென்ற பெயர்
அனுதினமும் உதவிடுதே

அகதியாகி
அசுல் வேண்டி
அடிமையாக
அலைந்த போதும்
பனிப்பொழிவில்
தினந்தினமும்
மாடாயுழைத்த போதும்
சொந்த மண்ணின் சுகமதனை
எந்த மண்ணும்
தந்திடாது

இந்த உண்மை புரிந்திருந்தும்
விதியென்று
விரும்பி ஏற்றோம்

அகதியாகி உலகமெங்கும்
அல்லல் பட்டு
அலைந்த போது
எமை நினைக்க நாள் குறித்த

ஐ.நாவே
உனக்கும் நன்றி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)