நான் மட்டும் நீயின்றி...

வெம்பி புழுங்கி கழியும் இரவை
அமாவாசை அள்ளித் தின்று
மூன்று நாட்கள்
ஆகியிருந்தது

மூன்றாம் பிறை பார்த்து
முந்தானையில் முகம் புதைத்து
கண்கள் குளமாகி
சிவந்து போயின

நேற்றும் இன்றும்
நினைவுடனே..

என் கணவன்
காணாமல் போய்
இன்றுடன்
மூன்று நாட்கள்…
யாருமில்லா அந்தரத்தில்
நான் மட்டும்
நீயின்றி
கண்ணீரும் தனிமையுமாக…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி