ஆகஸ்ட் 10, 2009

நான் மட்டும் நீயின்றி...

வெம்பி புழுங்கி கழியும் இரவை
அமாவாசை அள்ளித் தின்று
மூன்று நாட்கள்
ஆகியிருந்தது

மூன்றாம் பிறை பார்த்து
முந்தானையில் முகம் புதைத்து
கண்கள் குளமாகி
சிவந்து போயின

நேற்றும் இன்றும்
நினைவுடனே..

என் கணவன்
காணாமல் போய்
இன்றுடன்
மூன்று நாட்கள்…
யாருமில்லா அந்தரத்தில்
நான் மட்டும்
நீயின்றி
கண்ணீரும் தனிமையுமாக…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-