எல்லாம்
என்பதன் அர்த்தம்
புரியாதவரை
எல்லாம் இங்கே
புதுமையாகத்தான் இருக்கிறது.
வாரி வழங்கிய கைகள்
இன்று
வாட்டம் கண்டன.
ஏறு தழுவிய
மார்புகள் எல்லாம்
சோர்வு கொண்டன.
ஏர் பூட்டி உழுதிருந்த
நெல் வயல்கள்
வான் பார்த்துக்
காத்திருக்க
வாழாவிருப்பதுவே
வாழ்க்கையானது.
வசந்தத்தை எதிர்பார்த்து
காத்திருந்த வேளையிலே
வறட்சி மட்டுமே
மீதமானது...
பட்டினி கிடந்து
பழக்கப் பட்டதால்
பசி கூடவே எம்மில்
ஒட்டிக் கொண்டது
நிரந்தரமாக...
எதிர்பார்ப்புக்கள் எல்லாம்
ஏமாற்றங்களாகி
இன்னும்
வாழ்தல் வேண்டி
தொடர்கிறது சீவியம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-