விடியலின் ராகம்

நெற்கதிர்கள்
குனிந்து நின்று
நிலம் பார்க்கும்
வௌ்ளெலிகள் புற்றெடுத்து
விளையாடும்
பன்றியும் அகளானும்
படையுடனே நடை பயிலும்

நிறை குளம் பெருக்கெடுத்து
அருவி பாயும்
பாலியாறும் பறங்கியாறும்
கைகோர்க்கும்
ஊர் கூடியிருந்து உறவுடனே
உண்டு மகிழ்ந்த
எங்கள் அன்னை மடி
முறுவலிக்கும்

வற்றாப்பளை ஆச்சியும்
பன்றித் தலைச்சியாளும்
பங்குனியில்
பொங்கலிடும்
மாமாங்கேஸ்வரமும்
மாவிட்டபுரமும்
மறுபடியும் குதுகலிக்கும்
கன்னியாயை
காங்கேசன்துறை
கரம் பிடிக்கும்
கேதீச்சரமும்
கோணேஸ்வரமும்
கொடியேறும்

வல்லை வெளியும்
முல்லை மண்ணும்
சங்கமிக்கும்
மீன்பாடும் தேனாடும்
திருமலை நகரதுவும்
வன்னியுடன்
கைகோர்க்கும்
குருவிகள் மீண்டும்
இசைமழை பொழிந்து
குதுகலிக்கும்
சேவல்கள் வாழ்த்த
விடியலின் ராகம்
எதிரொலிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி