நெற்கதிர்கள்
குனிந்து நின்று
நிலம் பார்க்கும்
வௌ்ளெலிகள் புற்றெடுத்து
விளையாடும்
பன்றியும் அகளானும்
படையுடனே நடை பயிலும்
நிறை குளம் பெருக்கெடுத்து
அருவி பாயும்
பாலியாறும் பறங்கியாறும்
கைகோர்க்கும்
ஊர் கூடியிருந்து உறவுடனே
உண்டு மகிழ்ந்த
எங்கள் அன்னை மடி
முறுவலிக்கும்
வற்றாப்பளை ஆச்சியும்
பன்றித் தலைச்சியாளும்
பங்குனியில்
பொங்கலிடும்
மாமாங்கேஸ்வரமும்
மாவிட்டபுரமும்
மறுபடியும் குதுகலிக்கும்
கன்னியாயை
காங்கேசன்துறை
கரம் பிடிக்கும்
கேதீச்சரமும்
கோணேஸ்வரமும்
கொடியேறும்
வல்லை வெளியும்
முல்லை மண்ணும்
சங்கமிக்கும்
மீன்பாடும் தேனாடும்
திருமலை நகரதுவும்
வன்னியுடன்
கைகோர்க்கும்
குருவிகள் மீண்டும்
இசைமழை பொழிந்து
குதுகலிக்கும்
சேவல்கள் வாழ்த்த
விடியலின் ராகம்
எதிரொலிக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-