என் செல்ல சிங்காரியே
உன் பின்னால்
அலைந்து திரிந்த
அந்தக் காலத்து
அன்பான நினைவுகள்
உள்மனதில் நின்று
ஊமைக் காயமாய்
வலிக்கிறது
என் கண்ணுக்கும்
கவி பாடத்
தெரியும் என்ற
வித்தையை
சொல்லித் தந்தவளே
மொழிகள் அற்ற
உலகில் நாங்கள்
தனித்தனி
தீவுகளாக
உலா வந்தபோது
பேசமுடியாது தவித்த
காதலின் மொழியை
இப்போது
உன்னோடு
பகிர்ந்து கொள்வதில்
எத்தனை இன்பமடி
எனக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-