காதலின் மொழி புரிந்தபோது

என் செல்ல சிங்காரியே
உன் பின்னால்
அலைந்து திரிந்த
அந்தக் காலத்து
அன்பான நினைவுகள்
உள்மனதில் நின்று
ஊமைக் காயமாய்
வலிக்கிறது
என் கண்ணுக்கும்
கவி பாடத்
தெரியும் என்ற
வித்தையை
சொல்லித் தந்தவளே
மொழிகள் அற்ற
உலகில் நாங்கள்
தனித்தனி
தீவுகளாக
உலா வந்தபோது
பேசமுடியாது தவித்த
காதலின் மொழியை
இப்போது
உன்னோடு
பகிர்ந்து கொள்வதில்
எத்தனை இன்பமடி
எனக்கு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி