முடியும் இடம்தேடி

கன்று போட்ட மாடு
துவாலையடித்தது
கோழி கனகூழை
கிண்டியபடி...
முகமிழந்தும் மனிதர்களாக…
ஊசி முள்ளாய் குத்தியது
இதயத்தில் பெருவலி
கண்களில் அந்தி
வானச் சிவப்பு
உடல்களைத் தூக்கி நிறுத்தி
தாங்கிப் பிடித்த கால்கள்
தளர்நடையாக…
சுட்டிய திசையில்
நடைப் பயணம்…
தாகம் பெருந்தாகம்
தீர்க்க யாருமில்லை
விடத்தல் முட்கள் கிழித்து
உடும்பு வேட்டையாடிய
காடுகள் தாண்டி…
இன்னும் தொடரும்
எங்கள் நடைப் பயணம்
முடியும் இடம்தேடி
மீண்டும் மீண்டும்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)