பல்லியாய் மனிதர்கள்…

தடங்கள் பதிகின்றன
நடந்த கால்கள்
வலிப்பெடுத்தன…
சொந்த வீடு
சாய்ந்து படுத்த திண்ணை
ஓலைக் குடிசைகள்
எதுவுமே இப்போது இல்லை…

மரத்தடியில்………………
மழை இன்றி
வரண்டு கிடந்தன மரங்கள்
இலைகளைக் காணோம்
நிழலுக்கும் பஞ்சம்…

சுவரில் ஒட்டிய பல்லியாய்
மனிதர்கள்…
மடித்துப் போடப்பட்ட
காகிதத் தாள்கள்
காற்றில் பறந்தன…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)