இருளும் நானும்



















இயலாமைகளுக்குள்

வாழ்ந்து

பழக்கப் பட்டவன் நான்

மீண்டும் மீண்டும்

குழி தோண்டிப்

புதைத்துவிட

முயல்கிறேன்

என் இயலாமைகளை

என்னையும் மீறி

அது வீறுகொண்டு

என்னை அடக்கியாள

நினைக்கிறது...

பெரும் இறுமாப்புடன்

கடிவாளம் பூட்டிய

குதிரையாக

என்னைக் கட்டியாள

நினைக்கிறது

உருவமில்லாத

அந்த மர்மம்...

ஆனாலும்

இயலாமைகளுக்குள்

வாழ்ந்து

பழக்கப் பட்டவன்

நான்



கருத்துகள்

  1. //இயலாமைகளுக்குள்

    வாழ்ந்து

    பழக்கப் பட்டவன்

    நான்//

    பலரின் நிலையும் இன்று இது தான்...யதார்த்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. இயலாமைகளுடன் பலர் வாழ்கின்றனர். பல சமயங்களில் அதன் ஆதிக்கம்தான் ஜெயிக்கின்றது.
    அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
  3. இந்த வரிகள் அனைத்தும் பெரும்பாலும் நம் எல்லோர்க்குமே பொருந்தும். நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. வர வர நீங்கள் எழுதுவது குறைந்து கொண்டே இருக்கிறது............

    பதிலளிநீக்கு
  5. //இயலாமைகளுக்குள்

    வாழ்ந்து

    பழக்கப் பட்டவன்//

    இயலாமைக்குள்ள வாழ்ந்தாலும் ஒரு உத்வேக பொறி தெறிக்குது கவிதை முடியுமிடத்தில்..
    நல்லா வந்திருக்கு நண்பா :)

    பதிலளிநீக்கு
  6. ஈழத்து மக்களின் பெரும்பான்மையோர் இதே நிலைதான் தியா.மனதில் உறுதியும் நம்பிக்கையும் வாழ்வோம் என்கிற உத்வேகமும் நிச்சயம் வேணும்.
    வேறு வழியில்லை !

    பதிலளிநீக்கு
  7. //இயலாமைகளுக்குள்
    வாழ்ந்து
    பழக்கப் பட்டவன்
    நான்
    //

    நாங்களும் தியா.. :((((

    பதிலளிநீக்கு
  8. இயலாமையை கவிதை வரை வளர விடக்கூடாது.

    பதிலளிநீக்கு
  9. இயலாமையை இல்லாமை ஆக்கவேண்டும் சகோதரா ! எதனால் இயலாமை என்று தெளிந்து விட்டால்,மோதிப் பார்த்து விட வேண்டியது தான்!
    இயலாமை தரும் சுய இரக்கம் மனிதரை
    எழவொட்டாது. வாழ்வது ஒருமுறை.. இந்த சின்ன சின்ன விலங்குகள் நம்மைப் பூட்டிவிடலாகாது. நீ தோள் தட்டிப் புறப்படும் நேரம், உன் கன்னல் தமிழில் எழுதி விட்டுச் செல்வாய் ஒரு எழுச்சிக் கவிதை !

    பதிலளிநீக்கு
  10. என்ன சொல்ல தியா... படித்தேன்

    பதிலளிநீக்கு
  11. அருமையான கவிதை! எதார்த்தமா நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. இயலாமை இயற்கை அதனை ஒத்துக்கொள்வது பெருந்தன்மை அதனையும் கவிதையாய் வடித்து கொள்ளைக்கொள்வது அருமை

    இயல்பாய் இயலாமையையும் அதனின் ஊடுருவலையும் வடித்திருக்கிறீர்கள்

    நன்றி தியா

    ஜேகே

    பதிலளிநீக்கு
  13. Kousalya சொன்னது…

    //இயலாமைகளுக்குள்

    வாழ்ந்து

    பழக்கப் பட்டவன்

    நான்//

    பலரின் நிலையும் இன்று இது தான்...யதார்த்த வரிகள்.

    //

    நன்றி கௌசல்யா

    பதிலளிநீக்கு
  14. எஸ்.கே சொன்னது…

    இயலாமைகளுடன் பலர் வாழ்கின்றனர். பல சமயங்களில் அதன் ஆதிக்கம்தான் ஜெயிக்கின்றது.
    அருமையான கவிதை!

    //

    உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

    ம்..எதார்த்தம்!! நல்லா இருக்கு.
    //

    நன்றி சைவகொத்துப்பரோட்டா

    பதிலளிநீக்கு
  16. இந்திரா சொன்னது…

    இந்த வரிகள் அனைத்தும் பெரும்பாலும் நம் எல்லோர்க்குமே பொருந்தும். நன்றாக உள்ளது.

    //

    நீங்கள் சொல்வதும் சரிதான் இந்திரா

    பதிலளிநீக்கு
  17. ஜோதிஜி சொன்னது…

    வர வர நீங்கள் எழுதுவது குறைந்து கொண்டே இருக்கிறது............

    //

    அப்படியா ஜோதிஜி
    இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி எழுதுறேன்

    பதிலளிநீக்கு
  18. Balaji saravana சொன்னது…

    //இயலாமைகளுக்குள்

    வாழ்ந்து

    பழக்கப் பட்டவன்//

    இயலாமைக்குள்ள வாழ்ந்தாலும் ஒரு உத்வேக பொறி தெறிக்குது கவிதை முடியுமிடத்தில்..
    நல்லா வந்திருக்கு நண்பா :)

    //

    நான் எதை நினைத்து எழுதினேனோ
    அதை சொல்லிவிட்டீர்கள்
    நன்றி பாலாஜி சரவணா
    இயலாமைக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டவனுக்குத்தான்
    அதை எப்படி எதிர்கொள்வது - உடைப்பது என்ற வழி பிறக்கும்
    நான் அடிக்கடி சொல்வதுபோல
    பட்டவனுக்குத்தான் நோவு தெரியும்
    நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  19. ஹேமா சொன்னது…

    ஈழத்து மக்களின் பெரும்பான்மையோர் இதே நிலைதான் தியா.மனதில் உறுதியும் நம்பிக்கையும் வாழ்வோம் என்கிற உத்வேகமும் நிச்சயம் வேணும்.
    வேறு வழியில்லை !

    //

    நன்றி ஹேமா
    நம்புவோமாக

    பதிலளிநீக்கு
  20. சுசி சொன்னது…

    //இயலாமைகளுக்குள்
    வாழ்ந்து
    பழக்கப் பட்டவன்
    நான்
    //

    நாங்களும் தியா.. :((((
    //

    அப்படியா???

    பதிலளிநீக்கு
  21. தமிழ் உதயம் சொன்னது… இயலாமையை கவிதை வரை வளர விடக்கூடாது

    //

    சரிங்க

    பதிலளிநீக்கு
  22. மோகன்ஜி சொன்னது…

    இயலாமையை இல்லாமை ஆக்கவேண்டும் சகோதரா ! எதனால் இயலாமை என்று தெளிந்து விட்டால்,மோதிப் பார்த்து விட வேண்டியது தான்!
    இயலாமை தரும் சுய இரக்கம் மனிதரை
    எழவொட்டாது. வாழ்வது ஒருமுறை.. இந்த சின்ன சின்ன விலங்குகள் நம்மைப் பூட்டிவிடலாகாது. நீ தோள் தட்டிப் புறப்படும் நேரம், உன் கன்னல் தமிழில் எழுதி விட்டுச் செல்வாய் ஒரு எழுச்சிக் கவிதை !

    //

    உங்களின் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  23. Chitra சொன்னது…

    அருமையான கவிதை!
    //

    நன்றி Chitra

    பதிலளிநீக்கு
  24. வானம்பாடிகள் சொன்னது…

    யெஸ்:(

    //

    வரவு பதிஞ்சுட்டன்

    பதிலளிநீக்கு
  25. D.R.Ashok சொன்னது…

    என்ன சொல்ல தியா... படித்தேன்

    //

    ஏதாவது சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  26. ஜிஜி சொன்னது…

    அருமையான கவிதை! எதார்த்தமா நல்லா இருக்கு.

    //

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  27. இன்றைய கவிதை சொன்னது…

    இயலாமை இயற்கை அதனை ஒத்துக்கொள்வது பெருந்தன்மை அதனையும் கவிதையாய் வடித்து கொள்ளைக்கொள்வது அருமை

    இயல்பாய் இயலாமையையும் அதனின் ஊடுருவலையும் வடித்திருக்கிறீர்கள்

    நன்றி தியா

    ஜேகே

    //

    நன்றி இன்றைய கவிதை
    உங்களின் நீண்ட பின்னூட்டத்துக்கும் விளக்கத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி