நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்



இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.


ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆய்கினைகள் பண்ணி வைப்பேன்

காத்து நுழையாத வீட்டினுள்ளே
காவாலி அவன் நுழைந்தான்
பாத்துப்பாத்து கட்டி வைச்ச
செல்வமெல்லாம் கொண்டுபோனான்

முகமூடி கொண்டொருவன்
படியேறி வருவானென்று
அடிபாவி நான் நினைக்க
ஆதாரம் ஏதுமுண்டோ

கடிகாவல் செய்து வைக்க
காவலர்கள் யாருமில்லை
கடிநாயும் வளர்க்கவில்லை
காவலுக்கு வைக்கவில்லை

அந்தாளும் சிவனேன்னு
ஆகாயம் போயிட்டார்
இந்த உலகமதில் எங்களுக்கு
வேறு துணை யாருமில்லை

சிறுக்கி செம சிறுக்கி
சின்னமகள் இவளிருக்க
பொறுக்கி எடுத்த முத்து
வேறெதற்கு உலகினிலே

பொன்னனான பொன்மணியை
பொத்திப் பொத்தி வளர்க்கையிலே
கண்ணான கண்மணிகள்
கருவிழியும் மங்குதடி

கருவிழிகள் மங்கி மங்கி
காவல் செய்யும் வேளையிலே
இரவுதனில் எவன் வருவான்
எதையெடுப்பான் என்று பயம்

இரவு வரும் வேளையிலே
காடையர்கள் வீடு வந்தால்
இரவி வரும் வேளைக்குமுன்
பாடையெல்லோ கட்டிடுவார்

பொழுதேறிப் போகையிலே
வருவதுவோ நித துக்கம்
அழுதழுது கண்கள் மங்கும்
அனுதினமும் முகஞ்சினுங்கும்

கள்ளன் வந்தான் என்ற சேதி
வெள்ளம் போல பரவமுன்னர்
உள்ளங் கொள்ளை போனதென்று
ஊர் முழுக்க கதையுரைப்பார்

பருத்தி இலை போல நெஞ்சு
படபடக்கச் செய்யுதடி
நெருடி நெருடி நெஞ்சம்
பயத்தில் திணறுதடி

சிறு பெண்ணும் நானுமிங்கே
உறு மீனாய் தவிக்கையிலே
சிலவேளை வருநாளில்
வயசுக்கு வந்து விட்டால்

காப்பாற்ற நாதியற்று
கலங்கியெல்லோ போயிடுவேன்
பாப்பாரும் யாருமில்லை
பாவிநான் தவிக்கையிலே

கண்ணான கண்மணியே
காலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…

ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆய்கினைகள் பண்ணி வைப்பேன்…

கருத்துகள்

  1. தாலாட்டும்போதே அத்தனை வலிகளையும் சொல்லித் தாலாட்டும் பாக்யம் கொண்டவர்கள் எஙகள் தாய்மார்கள்தான்.அத்தனை வரிகளிலும் இன் இனத்தில் வேதனை.

    பதிலளிநீக்கு
  2. ஹேமா கூறியது...
    தாலாட்டும்போதே அத்தனை வலிகளையும் சொல்லித் தாலாட்டும் பாக்யம் கொண்டவர்கள் எஙகள் தாய்மார்கள்தான்.அத்தனை வரிகளிலும்



    //



    உண்மைதான் ஹேமா இலங்கைத் தமிழ்த் தாய்மார்களின் நவீன தாலாட்டு பாடல் இப்படித்தான் இருக்கிறது.

    பலர் வெளிப்படையாகச் சொல்கிறார்கள் வேறுசிலர் இப்படித்தான் மனதுக்குள் புழுங்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. மனபாரத்தை வெளிப்படுத்தும் தாலாட்டு.

    வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  4. பாலகுமார் கூறியது...
    மனபாரத்தை வெளிப்படுத்தும் தாலாட்டு.

    வாழ்த்துகள் !

    //

    நன்றி பாலகுமார்
    புதுசா வந்திருக்கிறிங்க
    தொடர்ந்து வாங்க

    பதிலளிநீக்கு
  5. //

    D.R.Ashok கூறியது...
    வாழ்த்துகள் தியா

    15 டிசம்பர், 2009 9:53 pm

    //

    நன்றி D.R.Ashok

    பதிலளிநீக்கு
  6. இதயம் வலிக்கும் தாலாட்டு

    விஜய்

    பதிலளிநீக்கு
  7. படிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...!

    பதிலளிநீக்கு
  8. //இதயம் வலிக்கும் தாலாட்டு//
    ரிப்பீட்டு

    வெற்றிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. //சிறுக்கி செம சிறுக்கி
    சின்னமகள் இவளிருக்க
    பொறுக்கி எடுத்த முத்து
    வேறெதற்கு உலகினிலே
    //

    வரிகளில் பெருமைமிகுதியாய் தெரிகிறாள் மகள்...!

    ரொம்ப நல்ல தாலாட்டு வரிகள்..!

    வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா..!

    பதிலளிநீக்கு
  10. கண்ணீர்ப் பூக்கும் கவிதை வரிகள். வெற்றி பெற வாழ்த்துகள் தியா.

    பதிலளிநீக்கு
  11. மனம் வலிக்க வலிக்க ஒரு தாலாட்டு...அருமை தியா...

    பதிலளிநீக்கு
  12. இப்படியோர் தாலட்டு பாடவா....அதில் அப்படியேஎன் கதையும் கூறவா? எனும் திரைப்படபாடல்
    நினைவு வருகிறது. மேலும் எடுத்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. அட அட... ! அருமை தியா...! வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப நெகிழ்ச்சியான கவிதை.. வெற்றிபெற வாழ்த்துக்கள் தியா..

    பதிலளிநீக்கு
  15. //கள்ளன் வந்தான் என்ற சேதி
    வெள்ளம் போல பரவமுன்னர்
    உள்ளங் கொள்ளை போனதென்று
    ஊர் முழுக்க கதையுரைப்பார்//

    பின்னீட்டீங்க தியா.பரிசு நிச்சயம்

    பதிலளிநீக்கு
  16. arumai. Idhayam thotta Kavidhai.
    Andha iLam SiRumi kaalam kaniyum varai kaathirukkattum -vayadhukka vara.

    பதிலளிநீக்கு
  17. கவிதை(கள்) கூறியது...
    இதயம் வலிக்கும் தாலாட்டு

    விஜய்

    //

    உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி விஜய்

    பதிலளிநீக்கு
  18. ஜீவன் கூறியது...
    படிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...!

    15 டிசம்பர், 2009 10:23 பம்
    //

    இது தூங்குவதர்கான தாலாட்டல்ல விளித்து எழுவதர்க்கானது.

    நன்றி ஜீவன்

    பதிலளிநீக்கு
  19. கண்மணி கூறியது...
    //இதயம் வலிக்கும் தாலாட்டு//
    ரிப்பீட்டு

    வெற்றிக்கு வாழ்த்துக்கள்

    //

    நன்றி கண்மணி

    பதிலளிநீக்கு
  20. பிரியமுடன்...வசந்த் கூறியது...
    //சிறுக்கி செம சிறுக்கி
    சின்னமகள் இவளிருக்க
    பொறுக்கி எடுத்த முத்து
    வேறெதற்கு உலகினிலே
    //

    வரிகளில் பெருமைமிகுதியாய் தெரிகிறாள் மகள்...!

    ரொம்ப நல்ல தாலாட்டு வரிகள்..!

    வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா..!

    //

    உண்மைதான் வசந்த்
    வாழ்த்துக்கு நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  21. வானம்பாடிகள் கூறியது...
    கண்ணீர்ப் பூக்கும் கவிதை வரிகள். வெற்றி பெற வாழ்த்துகள் தியா.

    //


    உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  22. நிலா முகிலன் கூறியது...
    மனம் வலிக்க வலிக்க ஒரு தாலாட்டு...அருமை தியா...


    //

    உங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி நிலா முகிலன்

    பதிலளிநீக்கு
  23. நிலாமதி கூறியது...
    இப்படியோர் தாலட்டு பாடவா....அதில் அப்படியேஎன் கதையும் கூறவா? எனும் திரைப்படபாடல்
    நினைவு வருகிறது. மேலும் எடுத்து வாருங்கள்.


    //

    அப்படியா!!!!
    நன்றியக்கா.

    பதிலளிநீக்கு
  24. கலகலப்ரியா கூறியது...
    அட அட... ! அருமை தியா...! வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்...!


    //

    நன்றி கலகலப்ரியா

    உங்களின் வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  25. பலா பட்டறை கூறியது...
    ரொம்ப நெகிழ்ச்சியான கவிதை.. வெற்றிபெற வாழ்த்துக்கள் தியா..


    //

    கவிதை பற்றிய உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி பலா பட்டறை

    பதிலளிநீக்கு
  26. புலவன் புலிகேசி கூறியது...
    //கள்ளன் வந்தான் என்ற சேதி
    வெள்ளம் போல பரவமுன்னர்
    உள்ளங் கொள்ளை போனதென்று
    ஊர் முழுக்க கதையுரைப்பார்//

    பின்னீட்டீங்க தியா.பரிசு நிச்சயம்



    //

    அப்படியா? !
    நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு
  27. cho visiri கூறியது...
    arumai. Idhayam thotta Kavidhai.
    Andha iLam SiRumi kaalam kaniyum varai kaathirukkattum -vayadhukka vara.

    16 டிசம்பர், 2009 7:22 அம


    //

    உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி cho visiri

    பதிலளிநீக்கு
  28. வித்யாசமா நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  29. ரொம்ப நல்லா இருக்குங்க. வலி தந்த போதும் அருமையான கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. /காப்பாற்ற நாதியற்று
    கலங்கியெல்லோ போயிடுவேன்
    பாப்பாரும் யாருமில்லை
    பாவிநான் தவிக்கையிலே

    கண்ணான கண்மணியே
    காலந் தாழ்த்தி வயசுக்கு வா
    மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//

    இது தாலாட்டு மட்டுமில்லை; தவிப்பும்,வலியும்,பயமும் சேர்ந்த வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லும் அழகான,கருத்துள்ள கவிதை.
    வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
  31. ஜீவன் கூறியது...
    படிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...!

    இதுதான் தியா உண்மை. அத்தனை வலி மிகுந்த வரிகள்

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. Mohan Kumar கூறியது...
    வித்யாசமா நல்லா இருக்குங்க

    16 டிசம்பர், 2009 10:03 am


    // நன்றி Mohan Kumar

    பதிலளிநீக்கு
  33. கல்யாணி சுரேஷ் கூறியது...
    ரொம்ப நல்லா இருக்குங்க. வலி தந்த போதும் அருமையான கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள்.


    //

    உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கல்யாணி சுரேஷ்

    பதிலளிநீக்கு
  34. பூங்குன்றன்.வே கூறியது...
    /காப்பாற்ற நாதியற்று
    கலங்கியெல்லோ போயிடுவேன்
    பாப்பாரும் யாருமில்லை
    பாவிநான் தவிக்கையிலே

    கண்ணான கண்மணியே
    காலந் தாழ்த்தி வயசுக்கு வா
    மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//

    இது தாலாட்டு மட்டுமில்லை; தவிப்பும்,வலியும்,பயமும் சேர்ந்த வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லும் அழகான,கருத்துள்ள கவிதை.
    வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!


    //

    உண்மைதான் பூங்குன்றன்
    என்ன செய்வது எண்களின் வாழ்வு வலியுடன் கூடியதாகி விட்டதே.
    நன்றி

    பதிலளிநீக்கு
  35. S.A. நவாஸுதீன் கூறியது...
    ஜீவன் கூறியது...
    படிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...!

    இதுதான் தியா உண்மை. அத்தனை வலி மிகுந்த வரிகள்

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


    //

    நன்றி S.A. நவாஸுதீன்

    பதிலளிநீக்கு
  36. ஸ்ரீ கூறியது...
    நல்ல கவிதை.வாழ்த்துகள்.

    16 டிசம்பர், 2009 1:11 பம்


    //

    வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  37. சோகமான தாலாட்டு... நல்ல மெட்டுடன் பாடினால் நெகிழ்ச்சி தரும்

    வெற்றி கிடைக்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  38. \\\\கண்ணான கண்மணியே
    காலந் தாழ்த்தி வயசுக்கு வா
    மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…\\\\\\\

    பெண்பிள்ளை இருந்தால் பெற்றவர்கள்
    எவ்வளவு மன உளச்சல்களுக்கு தள்ளப்
    படுகிறார்கள் .
    அங்கு ஆண்களுக்கும் அப்படித்தான்!
    வேறுபாடில்லை
    பிள்ளைகள்லென்றில்லை பாவம் செய்து
    தமிழாய் .....பிறந்த உயிர்கள். அனைத்தும்

    நெகிழ்வான பின்னலில்....துயரம் தொட்டிலில்
    சுமையாய் கனக்க....சோகமாய் ஆடுகிறது
    உங்கள் கவி

    தியா வெற்றி பெற ....வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
    ...................................

    பதிலளிநீக்கு
  40. "கண்ணான கண்மணியே
    காலந் தாழ்த்தி வயசுக்கு வா
    மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா"

    என்ன கொடுமை...நல்ல வரி அமைப்பு.

    "சிறுக்கி செம சிறுக்கி
    சின்னமகள் இவளிருக்க
    பொறுக்கி எடுத்த முத்து
    வேறெதற்கு உலகினிலே"...

    அருமை தியா..

    பதிலளிநீக்கு
  41. //கண்ணான கண்மணியே
    காலந் தாழ்த்தி வயசுக்கு வா
    மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//

    -Super Diya!

    பதிலளிநீக்கு
  42. //மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//


    அருமை தியா மண் மீட்கும் காலம் வரும்

    வெற்றியடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  43. தாலாட்டு தரும் அமைதி தாய்க்கும் தேவை. அமைதி நிலவட்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  44. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  45. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  46. அருமை தியா..

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  47. PPattian : புபட்டியன் கூறியது...
    சோகமான தாலாட்டு... நல்ல மெட்டுடன் பாடினால் நெகிழ்ச்சி தரும்

    வெற்றி கிடைக்க வாழ்த்துகள்

    //

    உங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி புபட்டியன்

    பதிலளிநீக்கு
  48. Kala கூறியது...
    \\\\கண்ணான கண்மணியே
    காலந் தாழ்த்தி வயசுக்கு வா
    மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…\\\\\\\

    பெண்பிள்ளை இருந்தால் பெற்றவர்கள்
    எவ்வளவு மன உளச்சல்களுக்கு தள்ளப்
    படுகிறார்கள் .
    அங்கு ஆண்களுக்கும் அப்படித்தான்!
    வேறுபாடில்லை
    பிள்ளைகள்லென்றில்லை பாவம் செய்து
    தமிழாய் .....பிறந்த உயிர்கள். அனைத்தும்

    நெகிழ்வான பின்னலில்....துயரம் தொட்டிலில்
    சுமையாய் கனக்க....சோகமாய் ஆடுகிறது
    உங்கள் கவி

    தியா வெற்றி பெற ....வாழ்த்துக்கள்.


    //

    உங்களின் நீண்ட கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலா

    பதிலளிநீக்கு
  49. adhiran கூறியது...
    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
    ...................................

    16 டிசம்பர், 2009 5:49 பம்

    //
    நன்றி adhiran

    பதிலளிநீக்கு
  50. ஸ்ரீராம். கூறியது...
    "கண்ணான கண்மணியே
    காலந் தாழ்த்தி வயசுக்கு வா
    மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா"

    என்ன கொடுமை...நல்ல வரி அமைப்பு.

    "சிறுக்கி செம சிறுக்கி
    சின்னமகள் இவளிருக்க
    பொறுக்கி எடுத்த முத்து
    வேறெதற்கு உலகினிலே"...

    அருமை தியா..

    //

    உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  51. இன்றைய கவிதை கூறியது...
    //கண்ணான கண்மணியே
    காலந் தாழ்த்தி வயசுக்கு வா
    மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//

    -Super Diya!

    16 டிசம்பர், 2009 6:20 பம்


    //



    நன்றி இன்றைய கவிதை.

    பதிலளிநீக்கு
  52. thenammailakshmanan கூறியது...
    //மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//


    அருமை தியா மண் மீட்கும் காலம் வரும்

    வெற்றியடைய வாழ்த்துக்கள்

    16 டிசம்பர், 2009 9:22 பம்


    //

    உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி thenammailakshmanan .

    பதிலளிநீக்கு
  53. Chitra கூறியது...
    தாலாட்டு தரும் அமைதி தாய்க்கும் தேவை. அமைதி நிலவட்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.


    //

    உண்மைதான் சித்ரா வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  54. சுசி கூறியது...
    அருமை தியா..

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    17 டிசம்பர், 2009 4:26 அம


    //

    நன்ன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  55. தியா இது தாலாட்டு தானே! பின்னே எப்படி கவிதைப்போட்டிக்கு?? இந்த தாலாட்டுப் பாடலை நிச்சயம் சிங்களப்பெண்கள் பாடமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  56. காலந் தாழ்த்தி வயசுக்கு வர வேண்டுமளவிற்கு வாழ்க்கை ஆகிப்போனதே.. கொடுமை.
    உங்கள் கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  57. இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
    தியா இது தாலாட்டு தானே! பின்னே எப்படி கவிதைப்போட்டிக்கு?? இந்த தாலாட்டுப் பாடலை நிச்சயம் சிங்களப்பெண்கள் பாடமாட்டார்கள்.


    //

    நிஜாம் முதலில் உங்களின் கருத்துக்கு நன்றி.
    நிஜாம் இலங்கையில் தமிழரும் இருக்கினம்.

    பதிலளிநீக்கு
  58. " உழவன் " " Uzhavan " கூறியது...
    காலந் தாழ்த்தி வயசுக்கு வர வேண்டுமளவிற்கு வாழ்க்கை ஆகிப்போனதே.. கொடுமை.
    உங்கள் கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்!


    //
    நன்றி உழவன்

    பதிலளிநீக்கு
  59. வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது... கவிதை மிக சிறப்புங்க தியா வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  60. அருமையான கவிதை. பல கதைகள் சொல்கிறது. பல விடயங்களுக்கும் பொருந்துகிறது.

    பதிலளிநீக்கு
  61. மனபாரத்தை வெளிப்படுத்தும் தாலாட்டு.

    பதிலளிநீக்கு
  62. சி. கருணாகரசு கூறியது...
    வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது... கவிதை மிக சிறப்புங்க தியா வாழ்த்துக்கள்.

    //

    உங்களின் வாழ்த்துக்கு நன்றி சி. கருணாகரசு

    பதிலளிநீக்கு
  63. இலங்கன் கூறியது...
    அருமையான கவிதை. பல கதைகள் சொல்கிறது. பல விடயங்களுக்கும் பொருந்துகிறது.

    19 டிசம்பர், 2009 6:05 pm

    //

    நன்றி இலங்கன்

    பதிலளிநீக்கு
  64. கடையம் ஆனந்த் கூறியது...
    மனபாரத்தை வெளிப்படுத்தும் தாலாட்டு.

    //

    உங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி கடையம் ஆனந்த்.

    பதிலளிநீக்கு
  65. இதயம் கனக்கும் கவிதை, மகள் பூப்படைவதைச் சீர் சனத்துடன் தந்தை பூரித்து நிற்கும் தமிழர், இன்று பயத்துடன் பார்க்கும் கொடுமை இது. விரைவில் நல்ல நாள் பிறக்கும். நம் வேதனைகளும் தீரும் என்ற நம்பிக்கையுடன்.......

    பதிலளிநீக்கு
  66. இந்தத் தாலாட்டைப் படித்து முடித்ததும் தூக்கம் அற்றுப் போகிறது. அருமையான வார்த்தை தோரணை !
    வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  67. வேதனை நிரம்பிய வரிகள்.

    வெற்றிபெற வாழ்த்துகள் தியா,வாழ்விலும்.

    பதிலளிநீக்கு
  68. பித்தனின் வாக்கு கூறியது...

    இதயம் கனக்கும் கவிதை, மகள் பூப்படைவதைச் சீர் சனத்துடன் தந்தை பூரித்து நிற்கும் தமிழர், இன்று பயத்துடன் பார்க்கும் கொடுமை இது. விரைவில் நல்ல நாள் பிறக்கும். நம் வேதனைகளும் தீரும் என்ற நம்பிக்கையுடன்.......

    21 டிசம்பர், 2009 9:13 அம


    //

    இது நடக்குமானால் சந்தோசம் நன்றி பித்தனின் வாக்கு

    பதிலளிநீக்கு
  69. அவனி அரவிந்தன் கூறியது...

    இந்தத் தாலாட்டைப் படித்து முடித்ததும் தூக்கம் அற்றுப் போகிறது. அருமையான வார்த்தை தோரணை !
    வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    21 டிசம்பர், 2009 11:44 அம


    //நன்றி அவனி அரவிந்தன்

    பதிலளிநீக்கு
  70. அக்பர் கூறியது...

    வேதனை நிரம்பிய வரிகள்.

    வெற்றிபெற வாழ்த்துகள் தியா,வாழ்விலும்.

    21 டிசம்பர், 2009 12:35 பம்


    //


    நன்றி அக்பர்

    பதிலளிநீக்கு
  71. வேதனை வடிகிறது உங்கள் வார்த்தைகளில்...

    தியாவின் பேனாவா?... தியாவின் உள்ளமா...?

    வேதனையை அருமை என்று சொல்லமுடியாது... அதனால் சொல்லவில்லை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  72. உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  73. அருமையான படைப்பு.. வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  74. வலியின் வரிகள்..வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  75. //மண் மீட்கும் காலம் வந்தால்
    மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//
    வலிக்கும் வார்த்தைகள். அற்ப்புதமான கவிதை பரிசு நிச்சயம். பரிசையும் தாண்டி இந்த பாடலில் இருக்கும் வலி படிக்கும் எல்லோரின் மனங்களிலும் இருக்க செய்ததது தான் உங்களின் உண்மையான வெற்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி