இது அமெரிக்காவின் மினேசொட்ட மாநிலத்தில் உள்ள ஒரு நூலகத்தின் வரவேற்பு பதாதை இது. இதில் தமிழ் இடம்பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும். அதை நீங்களும் பாருங்கள் நட்புகளே.
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்ற
இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன்
புத்தகம் என் உழைப்பில் பாதி கொடுத்துச் சேர்த்த சொத்து தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் இன்னொரு தாய்... மடிக்கணிணி என் பத்து விரல்களும் தூக்கி மகிழ்ந்து விளையாடும் இன்னொரு குழந்தை இணையம் உலகைச் சுருக்கி என் மடிக் கணிணிக்குள் பூட்டிவிட்ட விசித்திர விஸ்வரூபம் பாதணி மிதிபட்டுத் தேய்ந்துபோகும் வாய்பேசா அநாதை. கைப்பேசி சட்டைப் பையில் பதுங்கியிருந்து பணம் பறிக்கும் இரகசிய கொள்ளைக்காரன். பேனா என்றுமே என்னை வழிநடத்தும் வெள்ளைப்பிரம்பு. கடிகாரம் நேரமுகாமை கற்றுத்தந்த நல்லாசான்.. தூக்கத்தைக் கெடுக்க மணியடிக்கும் வில்லன். கண்ணாடி என் சுக துக்கம் மறைக்க மூக்கின் மேல் பூட்டிய கருப்பு ஆடை.
மகிழ்ச்சியாக உள்ளது.
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குசந்தோஷம்...
பதிலளிநீக்குஅருமை!!
பதிலளிநீக்குநந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!