சாமக்கவி












வாயு தேவனும் வருண பகவானும்
சங்கமித்து இசை பயிலும்
ஒரு பனிக்கால இரவின்
முன்சாமப் பொழுதொன்றில்
கட்டிலில் சாய்ந்தபடி
கவிதை எழுதத் தொடங்கினேன்.
கவிதை நீண்டு கதையாகிப் பின்
தொடர்கதையாய் நீண்டது.
சாளரம் திறந்து எட்டிப் பார்த்தேன்.
தீபாவளிக்கு இல்லாத விடுமுறை
திருக்கார்த்திகையில் வந்ததால்
வானத்து விண்மீன்கள்
நிலாவைத் துணைக்கழைத்தன விளையாட .
ஆழ்மனதில் ஒரு கவிதை தோன்றியபோது
எழுந்து விளக்கை அணைத்தேன்
வீணை மீட்டியபடி
பாடத் தொடங்கினேன்
ஒரு சாமகானம்.

– தியா –


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி