இடுகைகள்

எங்கள் செல்லக்குட்டிக்கு பிறந்தநாள்

படம்
எங்கள் செல்லக் குட்டி அக்ஷிகா தனது இரண்டாவது பிறந்தநாளை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் 01.10.2009 வியாழக்கிழமை இனிதே கொண்டாடுகிறார். அவரை அன்புள்ளங்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

ஆறாந்திணை - 05

படம்
பாலை :- மணலும் மணல் சார்ந்த இடமும். மணல் தின்ற புல்வெளி அனல் தின்ற பனந்தோப்பு புதையுண்டு எரியுண்ட மீதிக் காடுகள் எல்லாம் மணல் மேடாய்த் திட்டுகளாய்... எரியுண்ட தேசத்தில் சிதைவுகள் மட்டுமே மீதியாக... கால் மிதிக்கும் இடமெல்லாம் பல்லிளிக்கும் கூரிய முட்கள் யுத்த காண்டம் முடிந்த பின்னர் சிதைவுகளாய் எச்ச சொச்சம். வாழ்விழந்த வயல்வெளிகள் பொலிவிழந்து... பூவிழந்து தளிரிழந்து... கருகி நிற்கும் மரங்கொடிகள்... சிதைவுகளைச் சுமந்தபடி தனித்திருக்கும் வீதிகளும் வீடுகளும்... மீண்டும் ஓர் நாள் தோண்டப்படுவதற்காய் காத்திருக்கும் மண்தரைகள் எல்லாம் ஒன்றுகூடி எரியுண்ட தேசத்தின் காட்சிகளாகிப் படமெடுக்க நான் மட்டும் ... இழந்தவற்றைத் தேடியபடி மீண்டும்... மீண்டும்...........

ஆறாந்திணை - 04

படம்
குறிஞ்சி :- மலையும் மலைசார்ந்த இடமும். மலையொத்த மனிதரெல்லாம் ஏதிலியாய்வாழ்விழந்து ஒருவர் பின் ஒருவராக சிறைப்பட நடந்தனர். சிறுமலைகள் கூடிநின்ற பூமியைப் புறங்கண்ட பின்னொரு நாளில் மலைக்காடுகள் ஒன்றுகூடி மலைகளை மெல்ல மெல்லத் தின்றுகொண்டிருந்தன. மக்களையும் மண்ணையும் நீண்ட மலைத் தொடர்கள் பிரித்துக் கூறு போட்டபோது சூரியன் மலை இடுக்கில் விழுந்து இறந்து போனான். நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துகொண்டிருந்தன. நிலவு தேய்ந்து தேய்ந்து மறைந்து போனது. இன்னும்.... மனிதர் மட்டும் ஏதிலியாய் இழந்தவற்றை நினைத்தபடி வான் பார்த்து............

இனி சினிமா.....?

படம்
எங்கே போகிறது தமிழ் சினிமாவும் தொலைகாட்சிகளும் என்னும்படியாக அண்மைக்கால நிகழ்வுகள் அமைகின்றன. போட்டி போட்டு படங்களை வாங்கும் தொலைக்காட்சி மற்றும் சஞ்சிகை நிறுவனங்கள் தமது படத்துக்கு மட்டும் முன்னுரிமை தருகின்றன. சில சனல்களில் செய்தியின்போதுகூட தமது படங்கள் பற்றிய பேச்சுத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் தாம் விலை கொடுத்து வாங்கிய படம் ஓடாது எனத் தெரிந்தும் ஆறு ஏழு வாரங்களாக தமது தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதலிடத்தில் வைத்து கொண்டாடி ரசிகர்களை தன்பால் கவர்ந்திழுத்து ஒருமுறையாவது படத்தை பார்க்கவைத்து வீணே மூன்று மணி நேரத்தை தொலைத்து பணத்தையும் வீணாக்க வைக்கும் இவர்களை என்ன செய்வது? முன்னர் ஒருகாலத்தில் பாடல்களை எல்லா சேனல்களிலும் பார்க்க முடிந்தது இன்று காலம் மாறிவிட்டது. அந்தந்த படப் பாடல் காட்சிகளை பார்க்க வேண்டுமாயின் குறிப்பிட்ட படத்தை வாங்கும் சேனல்களை மட்டுமே பார்க்க வேண்டியுள்ளது. இதில் பில்டப்பு வேற. ஆதங்கத்துடன் தியா.....

கண்ணீர்

படம்
ஊனை உருக்கி உடலை வருத்தி தினம் சோற்றுக்கு வழியின்றி சொந்த மண்ணைப் பிரிந்து அகதி முகாமில் இடர்படும் தமிழன் உண்ட சோற்றில் உப்பில்லை கண்ணீர் துளி விழுந்து கசக்கிறது சோறு…

ஆறாந்திணை - 03

படம்
நெய்தல்:- கடலும் கடல் சார்ந்த இடமும் பல்லாயிரம் உயிர் தின்றும் அடங்காது ஆர்ப்பரிக்கும் கடல் இரைச்சல் நிறைந்த உலகின் சொந்தக்காரனாகிப் பயமுறுத்தும் பூதம். எம் மனம் போல் அமைதியின்றிப் பாய்கிறது நீல நீர். பெருகி வந்து உயிர் குடித்து உயிர்ச் சுவடழித்து - எம் நிம்மதியைக் குலைத்து எம்மை நிர்க்கதியாக்கிய அலை. மணல்த் திட்டால் மூடி எதுவும் நடவாதது போல் பாசாங்கு செய்யும் நீண்ட கரை எல்லாம் ஒன்றுகூடி இரைகிறது இன்னும் வேண்டுமென்று.

ஆறாந்திணை - 02

படம்
முல்லை:- காடும் காடு சார்ந்த இடமும் ஆயிரமாயிரம் நினைவலைகள் முட்டி மோதின. நினைவழியாப் பொழுதுகளில் உடும்பு முயல் மான் வேட்டையாடிய காடுகள் தனிமையில் உறையக் கண்டேன் . காட்டாற்றின் கரையினிலே கதையளந்த காலம் போய் மாயத் தோற்றங்கள் மனத் திரையில் கோலமிடக் கண்டேன். மவுனமாக வரையப்பட்ட என் கவிதையின் வரிகள் போல் அசைவற்றுக் கிடக்கிறது என் பூர்வீகக் காடு.