சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகிறாள்....

சித்திரைத் தமிழ் மகள்
சிலிர்ப்புடன் வருகின்றாள்
நித்திரை விட்டு
விரைவினில்
எழுந்திடுவோம்...

மருத்துநீர் தலை தடவி
வெந்நீரில் குளித்திடுவோம்
நெற்றியில் நீறணிந்து
நெறிப்படி வணங்கிடுவோம்
பெரியோர் தாள் பணிந்து
கையுறை பெற்றிடுவோம்...

சில்லறை வாங்கி
உண்டியல் சேர்த்து
உறவுகள் கூடி
நிறைவுடன் மகிழ்ந்து
புத்துடை அணிய
நித்திரை விட்டு -நாம்
விரைவாக எழுவோம்....

அன்றேல்...

நித்திரையின்றி
விடியும்வரை விழித்திருப்போம்...

சித்திரைத் தமிழ்மகள்
சிலிர்ப்புடன் வருகிறாள்
வாருங்கள் நாம்
சோகங்கள் மறந்து
சுமைகளை ஒருகணம்
இறக்கி
மகிழ்ந்திருப்போம்
நிறைவாக...

கருத்துகள்

  1. வருக தியா..

    கைக் காயம் முற்றிலும் குணமாகி விட்டதுதானே...சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சோகங்கள் மறந்து சுமைகளை இறக்கி..............முடியாது தான் இருபினும் வாழ்ந்து தானே ஆக வேண்டும்........புதுவருடத்தை ...நினை வூட்டும்........உங்கள் பதிவு அழகு

    பதிலளிநீக்கு
  3. புத்தாண்டோடு தியாவையும் வரவேற்கிறோம். வாழ்த்துகள் தியா. காயம் முற்றிலும் ஆறியதா?

    பதிலளிநீக்கு
  4. முற்றிலும் குணமடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...

    புத்தாண்டு வாழ்த்துக்கள் தியா....

    பதிலளிநீக்கு
  5. எப்படி இருக்கிறீர்கள், தியா மேடம்?
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. கை சரியாகிவிட்டதா தியா...?
    நலம்தானே...

    சித்திரையை வரவேற்க்க முத்திரைக் கவி...

    வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    சித்திரை / தமிழ்வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. ஹெலோ தள்ளுங்க
    தள்ளுங்க வழி விடுங்க

    தியா மேடம் வந்துகிட்டு இருக்காங்க
    தியா மேடம் வந்துகிட்டு இருக்காங்க
    தியா மேடம் வந்துகிட்டு இருக்காங்க .

    ஓகே வாழ்த்துக்கள்
    நன்றி வாழ்க வளமுடன்
    கவிதையுடன்
    களத்தில் குதித்து இருக்கும்
    தியாவிற்கு
    வாழ்த்துக்களை
    எங்கள் சங்கம்
    தெரிவித்து கொள்கிறது

    நன்றி
    வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
    காம்ப்ளான் சூர்யா

    பதிலளிநீக்கு
  8. புது வருடத்தில் புது தெம்புடன் வருகின்றீர்கள். தியா நேற்றுத்தான் எனக்கு உங்களின் நினைவு வந்ததது. அட கையில் அடிபட்டவர் எப்படி உள்ளார் என விசாரிக்காமல் விட்டு விட்டேமே என்று நினைத்து வருத்தப்பட்டேன். இன்று வந்ததும் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டு விசாரிக்க வேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால் என்ன ஒரு கே இன்சிடேண்ட் நீங்கள் பின்னூட்டம் போட்டு உள்ளீர்கள். மிக்க நன்றி. இடையில் மறந்தமைக்கு மன்னிக்கவும். இப்ப கை எவ்வாறு உள்ளது?. அலுவலக பணிகளுக்கு செல்கின்றீரா? நலம் விழைய ஆவல். தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நலம் பெற்று திரும்பிய உங்களுக்கு
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை தியா அண்ணா....! தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு
  12. மிகவும் அழகாக இருக்கு இந்நாள்.

    உங்கள் உடல் நலம் தேறியது குறித்து மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் அருமையான கவிதைகள் தர வாங்க வாங்க என்று தமிழ் பதிவர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.
    :) பேனாவால் இன்னும் பேசுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஹாய்.. தியா.. நீண்ட நாள் கழித்து புது எழுத்துக்களுடன் வந்திருக்கிறீர்கள்...

    நலமா?

    பதிலளிநீக்கு
  14. உங்கள் கவிவரிகள்….
    மீட்டெடுக்க முடியாத
    பல வருடங்களுக்கு முன்
    நடந்தவைகளை நினைவூட்டின

    பெற்ற நலம்
    பிரியாதிருக்க
    என் வேண்டுதலுடன்....
    தமிழ்ப் புத்தாண்டு
    வாழ்த்துகள் தியா!

    பதிலளிநீக்கு
  15. காயங்கள் என்பதே ஆறுவதற்கு தானே? ஆறாத ரணங்கள் கூட சித்திரையில் மாறி உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா9 மே, 2010 அன்று AM 8:06

    thia epdierukenga

    nalama erukengala

    enna aituru padivugal varavillai

    kavalikolkiren

    nalamaieruka priathikren

    ungalkum eniya anniyar thina valthukal

    pasathodu oru
    vasagan
    surya

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி