வ(ச)ந்த காலம் மாற்றம்

என்னுடைய இந்தக் கவிதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத் தமிழ் இதழான பனிப்பூக்கள் இதழின் 04/16/2013 http://www.panippookkal.com/ithazh/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/ அன்றைய பதிப்பில் வெளிவந்தது 


vasatham_288x288நேற்றைய மாலைப் பொழுதில்
என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி
துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி
குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. .
வசந்தகாலத்தின் வரவுக்கண்டு
மரங்கள் குருத்தெறிந்து
மொட்டுவிட்டுக்  கருத்தரிக்க
கொட்டும் மழையில்
தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து
அம்மணமாக நின்றன.

வீதியில் தொடை தெரிய
நடைப் பயணம் போனாள்  ஒரு யுவதி.
தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர்.

கடிகாரச் சிறு முள்ளின்
ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம்
வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து
பதுங்கிக் கொண்டது பசுந்தரை
ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை
தொடர்ந்து பொழியும் வெண்பனியில்
கருஞ்சாயம் போக்கி
மீண்டும் வெண்துகில் போர்த்திய படி
நீட்டி நிமிர்ந்து நீளுறக்கம் கொண்டிருந்தது…
வசந்தத்தின் வருகைக்காய்க் காத்திருந்து
தோற்றுப்போன மரங்கள்
மீண்டும் பனிப்பூக்கள் சுமந்த படி அணிவகுத்து நின்றன.

அகதியாகிப் போன
இரு சிறு குருவி பற்றிய நினைவில் மிதந்தபடி
நான் மட்டும் தனியாக வெளிபார்த்து.

- தியா -

கருத்துகள்

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி