இயலாமைகள்

நடை பாதையை மறித்து
மூக்கை நீட்டும்
கடைகளின் முன் கூடாரங்கள்....

வீதிக் கடவைகளில்
நடக்கும் போது குறுக்கறுக்கும்
விரைவுந்துகள்....

பேருந்தில் மூச்சடக்கி
கால்வைக்க இடம் தேடும் நான்...

மல்லுக்கட்டி நடத்துனர் மீது
சண்டை போடும்
ஒரு கூட்டம்....

மாற்றுத் திறனாளிகள்
மற்றும்
முதியோர் இருக்கைகளில்
காதில் மாட்டிக்
கைப்பேசியில் இசை
கேட்கும் இளசுகள்....

தள்ளாடும் வயதிலே
தன் குடும்ப வாழ்வுக்காய்
உழைக்க புறப்பட்ட
பெரிசுகள் நிலையாக
ஆனால்
பேருந்து மட்டும் நகரும்....

தின வாழ்க்கை வாழ்வதற்கு
காலையிலும் மாலையிலும்
கொளத்தூரும் - கோடம்பாக்கமும்
என் வீட்டுத் திண்ணைகளாகும்....
இப்படியே
நாள்தோறும் நம் பிளைப்பு
கணிணியிலும்
வழிச் செல்லும்
பாதையிலும் கழிகிறது........


கருத்துகள்

  1. கொளத்தூரிலா இருக்கீங்கள் தியா? கவிதை நன்று

    பதிலளிநீக்கு
  2. யதார்த்தம்..

    நல்லா இருக்கு தியா.

    பதிலளிநீக்கு
  3. அனுபவக் கவிதை அழகு
    தியா நன்றி

    பதிலளிநீக்கு
  4. பிரேமாமகள்3 ஜூன், 2010 அன்று AM 2:21

    யதார்த்தம்..

    பதிலளிநீக்கு
  5. கடைசி ஒரு பத்தி மட்டுமே போதுமானது.

    பதிலளிநீக்கு
  6. வானம்பாடிகள் சொன்னது…
    கொளத்தூரிலா இருக்கீங்கள் தியா? கவிதை நன்று

    2 ஜூன், 2010 11:17 pm


    //

    ஆமாங்க
    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. சுசி சொன்னது…
    யதார்த்தம்..

    நல்லா இருக்கு தியா.

    3 ஜூன், 2010 1:20 am

    //

    நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  8. கலா சொன்னது…
    அனுபவக் கவிதை அழகு
    தியா நன்றி

    3 ஜூன், 2010 12:43 pm
    //


    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  9. அக்பர் சொன்னது…
    கவிதையை உணர்ந்தேன். அருமை தியா.

    3 ஜூன், 2010 1:58 pm

    உங்களின் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. பிரேமாமகள் சொன்னது…
    யதார்த்தம்..

    3 ஜூன், 2010 2:51 pm

    //

    நன்றி

    பதிலளிநீக்கு
  11. ஜோதிஜி சொன்னது…
    கடைசி ஒரு பத்தி மட்டுமே போதுமானது.

    3 ஜூன், 2010 3:29 pm

    //

    ஏன் மற்றவை பிடிக்கலையா? உங்கள் பின்னூட்டத்துக்கு
    நன்றி

    பதிலளிநீக்கு
  12. படைப்பும் படமும் மிக யதார்த்தம் தியா,
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. தியா தங்களின் கவிதை வரிகள் மிக அருமை.
    எதார்த்தமாய் இருக்கிறது..

    அதுசரி நண்பா ஏன் ஆளையே காணவில்லை..

    பதிலளிநீக்கு
  14. பேச நேரமில்லாமல் போனால் நா ஊமையாகும் பேனா பேசும்
    சரிதானே தியா

    பதிலளிநீக்கு
  15. நஜம் தியா , யோசிக்க சற்று அலுப்பும் கூட

    பாரட்டுக்கள்,

    நன்றி ஜேகே

    பதிலளிநீக்கு
  16. நடக்கும் பாதியில் கிடக்கும் கவிதை மிக நன்றாக வந்துள்ளது...வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  17. பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
    உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
    www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
    எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

    பதிலளிநீக்கு
  18. தியா

    இயலாமையையும் இயல்பாய் விவரித்திருக்கிறீர்கள்
    கொளத்துருக்கும் திருவான்மயூருக்கும் தூரம் அதிகம் இணையம் இனைக்கிறது கவிதை இனிக்கிறது , தங்களை சந்திக்க வேண்டும் !!


    நன்றி
    ஜேகே

    பதிலளிநீக்கு
  19. கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி