இடுகைகள்

ஜனவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துளித்துளியாய்....

புல்லாங்குழல் காற்று நுழைந்து சில்மிசம் செய்யும் வரை ஊமையாகத்தானே கிடந்தது புல்லாங்குழல்… நட்பு எதிரெதிரே சந்தித்தும் நீ வாய்பேசாது சென்றபோது நானும் ஊமையாகி விட்டேன். தும்மல் கண் மூடித் தியானிக்க கடவுள் தந்த கண நேர வரம்

விவசாயி தாள் வணக்கம்.

படம்
எனது வலையுலகச் சொந்தங்களே ! உங்கள் அனைவருக்கும் எனது உழவர் திருநாளாம் தைப் பொங்கல் மற்றும்.... தை முதல் நாள் வாழ்த்துகள். தை பிறந்து விட்டது அனைவர் வாழ்விலும் புது வழிகள் பிறந்து வலிகள் தீர்ந்து இனிவரும் நாட்களில் வளமாய் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். சேற்றில் புரண்டெழும்பி வயல் நிலத்தில் தாளமிட்டு உழுது நல்ல வரப்பிட்டு நெல்லெறிந்து உரம் விதைத்து நிலம் காத்து சொல் பொறுக்காச் சோர்விலராய் கண்ணுறக்கம் ஏதுமின்றி எல்லையிலே காவலிட்டு நெற்கதிர்கள் குனிந்து மண்ணில் கோலமிடும் காலம் வர பக்குவமாய் அறுத்து நல்ல பதத்துடனே சூடடித்து உலகமக்கள் உய்திடவே உழைத்து நல்ல வேர்வை சிந்தி உன்னதமாய் வாழும் எங்கள் நன்செய் மாந்தர்தனை நாளும் நினைத்திடுதல் நலமன்றோ.............. தானுண்ணா வயிறு காய்ந்து தன்நாடு செழித்திடவே பாடுபடும் - அவ் ஏர் பிடித்த கைகளுக்கு பலகோடி வந்தனங்கள்......... நாடு வளம் பெற்று நல்மனிதர் நகரேகி கூடு குலத்துடனே வளம் கொழிக்க வாழ்ந்தாலும் நாடு செழித்திடவே "பாடு"கள் பலசுமந்து காடு வெட்டி நல்ல களனி செய்து ஏர்வழியே தான் நடந்து வேர்வையினை உரமாக்கி நெல்மணிகள் விளைச்சலிடும்

ஊன்றுகோல்

சொந்த வீட்டை பார்க்கும் ஆசையில் முந்தி விழுந்து முதலில் ஓடியதால் மிதிவெடி தந்த முதற்பரிசு . .

ஹோசிமின் நினைவாக...

படம்
இந்தக் கவிதை ஒரு கியூபா நாட்டுக் கவிதையின் மொழிபெயர்ப்பு. பேராசிரியர் எம்.ஏ . நுஃமான் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டது. அண்மையில் படிக்க நேர்ந்தது. படித்த நேரத்திலிருந்து மனதை நெருடியபடியே இருந்தது ................................. அதை நீங்களும் படிக்க பதிவிலிடுகிறேன். "வேட்டை விமானம் விண்ணில் இரைந்தன விசப்புகைக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன எகிறிப் பறந்தன பீரங்கிக் குண்டுகள் சடசடத்தன மெசின் துப்பாக்கிகள் ஓலம் .............. அழுகை............. கூக்குரல் ஒலிகள் ......... வயற்புறங்களிலும் வாசற்படிகளிலும் ஓடிய இரத்தம் மறைந்து கிடந்தன குடிசைகள். கரும்புகை மிக மெதுவாக விண்ணில் கலந்தது. அடர்ந்த காட்டில் அமைதி துயின்றது. இடைக்கிடை எங்கோ இருண்ட பகுதியில் காட்டுப் பூச்சிகளின் கத்தல் கேட்டது. மூங்கில் புதர்கள் மூடிய ஆற்றின் கரையில் மெதுவாய் காற்று வீசியது. தண்ணீர்ப் பையில் தண்ணீர் நிரப்பிய வீரன் நிமிர்ந்து மேலே நோக்கினான்........ மூங்கிலில் வண்ணப் பூச்சிகள் மொய்த்தன. பத்துங்கியிருந்த படையினனை நோக்கி முதுகுச் சுமையுடன் அவன் முன் நடந்தான் மரங்களின் கீழே மடியில்